இனி ரயில் டிக்கெட்கு 33 சதவீதம் தள்ளுபடி!! IRCTC – யின் அசத்தல் அறிவிப்பு!!

0
35
33 percent discount on train tickets now!! Crazy announcement from IRCTC!!
33 percent discount on train tickets now!! Crazy announcement from IRCTC!!

இனி ரயில் டிக்கெட்கு 33 சதவீதம் தள்ளுபடி!! IRCTC – யின் அசத்தல் அறிவிப்பு!!

இந்தியாவில் ரயில் பயணம் என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது.அந்த வகையில் பொதுமக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புவதற்கு காரணம் அவை மிகவும் வசதியானது என்பதுதான் அதனின் முக்கிய அம்சமாகும். அதனால் பயணிகள் மிகவும் பேருந்து ,விமானம் போன்றவற்றை விட ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.

இதில் அதிகம் சாமானிய  மக்கள்தான்  விரும்பி பயணம் செய்கின்றனர்.இதனால் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகமும் பல சலுகைகளையும் ,வசதிகளையும் பயணம் செய்பவர்களுக்கு வழங்கி வருகின்றது.

மேலும் இந்தியாவில் பல புனித தளங்கள் உள்ளதால் அண்டை நாடுகளில் இருந்து பெரும்பாலான பொதுமக்கள் இந்தியாவிற்கு வருகின்றனர். இதனால் ஐஆர்சிடிசி  அசத்தல் அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.

எனவே இனி உத்தர் பாரத் ட்ரிப்பின் முதலிய தளங்களை பார்க்க வரும் மக்களுக்கு வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்க ஐஆர்சிடிசி முடிவு செய்துள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் புனித தளங்களுக்கு சுலபமாக செல்ல முடியும்.

அது மட்டுமல்லாமல் ஐஆர்சிடிசி சிறப்பு ரயில்கள் புனித யாத்திரை தலங்களை இணைக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனோடு பயண சலுகையாக டிக்கெட்களுக்கு 33 சதவீதம் தள்ளுபடி வழங்குவதாக ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் மூலம் இந்தியாவில் உள்ள பாரத் கவுரவ் ஹரித்வார் ,ரிஷிகேஷ் ,வைஷ்ணவி தேவி கோவில் ,அமிர்தசரஸ் ,மதுரா போன்ற பல இடங்களுக்கு செல்லும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏராளமான பொதுமக்கள் பயனடைவார்கள் என்று கருதப்படுகின்றது.

author avatar
Parthipan K