வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 33 சவரன் தங்க நகை பணம் கொள்ளை- காவல் துறையினர் விசாரணை

0
165
#image_title

வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 33 சவரன் தங்க நகை பணம் கொள்ளை- காவல் துறையினர் விசாரணை

திருவண்ணாமலை அடுத்த துர்க்கை நம்பிம்மியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஆனந்தன். இவரது மனைவி ரங்கநாயகி. இவர்களுக்கு அருண்குமார் என்ற மகனும் கோமதி என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் ஆனந்தன் நேற்று இரவு வழக்கம் போல் வீட்டின் வெளியே உறங்கியுள்ளார். அவரது மனைவியும் மகன் மற்றும் மகளும் மாடியில் உறங்கியுள்ளனர்.

இன்று அதிகாலை ஆனந்தனி வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் வந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து பீரோவில் வைத்திருந்த 33 சவரன் தங்க நகை, 15 ஆயிரம் ரொக்க பணம், இரண்டு ஜோடி கால் கொலுசுகள், இரண்டு வெள்ளி அரைஞான் கயிறுகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து திருவண்ணாமலை காவல்துறைக்கு காவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பெயரில் திருவண்ணாமலை கிராமிய காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து தங்க நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

விவசாயி வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 33 சவரன் மற்றும் 15 ஆயிரம் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
Savitha