பாலியல் புகாருக்கு ஒரு லட்சம் லஞ்சம்! போலீசாருக்கு அரசு கொடுத்த அதிரடி கிப்ட்!

0
100
5 lakh bribe for sexual complaint! Action gift given to the police by the government!
5 lakh bribe for sexual complaint! Action gift given to the police by the government!

பாலியல் புகாருக்கு 5 லட்சம் லஞ்சம்! போலீசாருக்கு அரசு கொடுத்த அதிரடி கிப்ட்!

பெண்களுக்கு எதிராக ஆங்காங்கே வன்கொடுமைகள் நடந்து கொண்டே தான் வருகிறது. அந்த வகையில் பல பெண்கள் நீதியை கேட்டு நீதிமன்றத்தை நாடினாலும் அந்த வழக்கு இழுக்கப்படுகிறதே தவிர அதற்கான நீதி உடனடியாக கிடைப்பதில்லை. அந்த வகையில் தான் உத்திர பிரதேசத்தில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. சென்ற ஆண்டு பெண் ஒருவரை புகழ்பெற்ற சுவாமி விவேகானந்தா மருத்துவமனை உரிமையாளர் மற்றும் காவல் ஆய்வாளர் ராம் வீர் என்பவர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறையோ குற்றவாளிகளிடமிருந்து பல லட்ச ரூபாயை பெற்றுக் கொண்டு இந்த பெண்ணின் வழக்கை கண்டுகொள்ளவில்லை. இந்த வழக்கை அப்போது இருந்த டிஎஸ்பி வித்யா கிஷோர் சர்மா என்பவர் பதிவு செய்தார். இவர் குற்றம் செய்தவர்களிடம் இருந்தும் லஞ்சத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

இவ்வாறு இருந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் நான் கொடுத்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மீண்டும் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்து, பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ராம் வீரை சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டனர். பின் அவர் மீது வழக்கும் போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இவர்களிடமிருந்து காவல் துறை அதிகாரி வித்யா கிஷோர் லஞ்சம் பெற்ற வீடியோ கையும் களவுமாக சிக்கியது. அதனையடுத்த உத்திரபிரதேச அரசு, டிஎஸ்பி பணியில் இருந்த வித்யா கிஷோரை கான்ஸ்டபிள் பணிக்கு மாற்றம் செய்துள்ளனர்.