சனி வக்கிர பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 5 ராசிக்காரர்கள்!

0
48

சனி வக்கிர பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 5 ராசிக்காரர்கள்!

கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி முதல் சனி பகவான் கும்ப ராசியில் தற்போது வக்கிர பெயர்ச்சி செய்து பின்னோக்கி நகர்ந்து வருகிறார். இதனால், நவம்பர் 4ம் தேதி வரை சனியால் பணமழையில் நனையப்போகும் அதிர்ஷ்டக்கார ராசிக்காரர்கள் யார், யாரென பார்ப்போம் –

மேஷம்

சனி வக்ர பெயர்ச்சியால், மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் ஏதாவது தொழிலை தொடங்கினால் உங்களக்கு அதிர்ஷ்ட பலன் கிடைக்கும். உங்கள் தொழிலில் முன்னேற்றம் பிறக்கும். தொழிலில் முதலீடு செய்தவர்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். உங்கள் வியாபாரத்தில் நல்ல வருவாய் பெருவீர்கள். பணியிடத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். வெற்றி பிறக்கும்.

மிதுனம்

சனி வக்ர பெயர்ச்சியால், மிதுன ராசிக்காரர்களே பலவிதத்தில் நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். தொழிலில் வெற்றி பெறுவீர்கள்.

வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். வேலை செய்யும் இடததில் பதவி உயர்வு பெறுவீர்கள். நண்பர்களால் நல்லவை பிறக்கும். வேலை செய்யும் இடத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்

சனி வக்ர பெயர்ச்சியால், சிம்ம ராசிக்காரர்களே உங்களுக்கு நன்மைகள் பிறக்கும். எந்த தொழிலை செய்தாலும் வெற்றி பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்பு பெறுவீர்கள். நினைத்த காரியங்கள் இனிதே நிறைவேறும். சனி பகவான் அருளால் தொழிலில் நல்ல பணத்தை பெறுவீர்கள்.

துலாம்

சனி வக்ர பெயர்ச்சியால், துலாம் ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் தேடி வரும். நிதி நிலை சீராக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள். வியாபாரத்தில் நல்ல வருமானம் பெறுவீர்கள். தொழிலில் ரீதியாக நீங்கள் மேற்கொள்ளும் பயணங்கள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும்.

தனுசு

சனி வக்ர பெயர்ச்சியால், தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு நன்மைகள் தேடி வரப்போகிறது. பணி செய்யும் இடத்தில் நல்ல பெயரும், பாராட்டும் பெறுவீர்கள். புதிதாக வேலை தேடி வரும். தொழில் சிறக்கும். நல்ல வருமானம் பெறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிக்கும்.

author avatar
Gayathri