60 சாதனங்களை ஒரே நேரத்தில் இணைத்து பயன்படுத்தலாம்! ஏர்டெல்லின் அதிரடியான அறிவிப்பு

0
70

வீட்டிலிருந்தே வேலை செய்யும் மக்கள் அதிகமானதால் அவர்களுக்கு ஏற்ற வகையில் ஏர்டெல் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒரே நேரத்தில் 60 டிவைஸ்கலை பயன்படுத்தக்கூடிய ஒரு ஸ்கீம் ஏர்டெல் உருவாக்கியுள்ளது. அதற்கு மாதாந்திர கட்டணமாக ரூ 3, 999 ரூபாய் என கூறியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் தவிர்த்து வருகின்றனர். கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டிலும் வீட்டிலிருந்து அலுவலக வேலைகள் அனைத்தையும் செய்வோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

அதனால் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பைபர் பிராட்பேண்ட் என்ற இணைப்பு சேவையை வழங்கி வருகிறது.இந்த ஃபைபெரின் அதிவேக wi-fi ரூட்டர்களை ஒரே இணைப்பில் சுமார் 60 சாதனங்களை இணைக்க முடியுமாம்.

ஒரு குடும்பத்தில் அதிவேக பைபர் பிராண்ட் கனெக்சன் இருந்தாலும் பல டிவைஸ்களை இணைப்பதால் நெட்டின் வேகம் குறைந்து பல சிக்கல்களை எதிர் கொள்கிறார்கள். வாடிக்கையாளரின் இந்த சிக்கலை தீர்ப்பதற்காக தான் FTTH ( fiber to the home) என்ற கனெக்சன் மூலம் ஒரே நேரத்தில் 60 சாதனங்களை இணைத்து அதிவேக wi-fi ரூட்டர்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

இது அதிகபட்சமாக 1 ஜிபிபிஎஸ் வரையிலான ஸ்பீடு வழங்குகிறது. இதை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் பாரதி ஏர்டெல் நிறுவனம் ஒரே நேரத்தில் 60 சாதனங்களுக்கான இணைப்பு என்ற புதிய விளம்பரம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கு மாதாந்திர கட்டணமாக ரூ 3999 எனக் கூறியுள்ளது. இந்த பிரபல வை-பை ரவுட்டர்களை வை-பை ரவுட்டரை உற்பத்தி செய்யும் Dasan – இடம் வாங்கியுள்ளது.

இந்த அதிவேக wi-fi ரவுட்டர் மூலம் ஒரே நேரத்தில் ஸ்மார்ட்போன்கள் லேப்டாப்கள் டேபிளட்ஸ், ஸ்மார்ட் TV, கேமிங் டூல்ஸ், வீட்டு மின்னனு பொருட்கள் என ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம்.

author avatar
Kowsalya