தொடரும் ஊரடங்கு! எந்தெந்த மாவட்டங்களுக்கு கட்டுப்பாடு தளர்வுகள் என்ன?

0
66

ஊரடங்கு இன்னும் 7 நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளதால் 11 மாவட்டங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களுக்கு தளர்வுகள் என்ன என்பதைப் பற்றி முழு விவரம் தமிழக அரசின் செய்தி குறிப்பு சொல்லியுள்ளது.

கடந்த மே 24-ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. வருகின்ற ஜூன் 7ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் நோயின் பரவல் குறித்து எடுக்கப்பட்ட ஆய்வில் சில மாவட்டங்களுக்கு மட்டும் தலைப்புகளுடன் கூடிய ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது.

பல மாவட்டங்களில் கட்டுக்குள் வந்த போதிலும் கோயம்புத்தூர் திருப்பூர் ஈரோடு கரூர் சேலம் நாமக்கல் தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை நீலகிரி ஆகிய மாவட்டங்கள் நோய் தொற்றுகள் அதிகமாக பரவி வருகிறது எனவே மேற்கண்ட அனைத்து மாவட்டங்களில் நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளங்களும் மேலும் 11 மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஜூன் 7 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

அவை பின்வருமாறு:

1. மளிகை பலசரக்குகள் காய்கறிகள் இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் தனியாக செயல்படுகின்ற கடைகள் 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் அனுமதிக்கப்படுகிறது.
2. காய்கறி பழம் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் 6 மணி முதல் 5 மணி வரை செயல்படும் அனுமதிக்கப்படுகிறது.
3. இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.
4. அரசு அலுவலகங்களில் 30 சதவீத பணியாளர்கள் செயல்படும் அனுமதிக்கப்படுகிறது.
5. மீன் சந்தைகளிலும் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்படும் அனுமதிக்கப்படுகிறது.
6. சார் பதிவாளர் அலுவலகங்களில் ஒரு நாளைக்கு 50 சதவீதம் டோக்கன்கள் மட்டும் கொடுத்து பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது.
7. தீப்பெட்டி தொழிற்சாலைகளில் 50 சதவீத பணியாளர்களுடன் நெறிமுறைகளை பின்பற்றி அனுமதிக்கப்படுகிறது.

மேலே குறிப்பிட்ட 11 மாவட்டங்களில் இந்தத் அளவுகளுடன் ஊரடங்கு அமல் ஆகிறது இவ்வாறு அரசின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.