7வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை – நீதிபதியின் தீர்ப்பால் அதிர்ந்த குற்றவாளி

0
69

7 வயது சிறுமிக்கு பாலியன் தொந்தரவு கொடுத்தவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சேலம் மாவட்டம் திருமனூரை சேர்ந்த 41 வயதான அய்யனார் என்பவன் கூலி வேலை செய்து வந்துள்ளார். 2016ம் ஆண்டு மாலை வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய அய்யனாரின் கண்களுக்கு 7 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்தது தென்பட்டது. சிறுமிக்கு மிட்டாய் வாங்கி தருவதாக கூறி மறைவான பகுதிக்கு அழைத்து சென்ற அந்த நபர் பாலியல் ரீதியான தீண்டல்களில் ஈடுபட்டுள்ளான்.

அங்கிருந்து அழுதபடியே வீட்டிற்கு வந்த சிறுமி நடந்ததை பெற்றோரிடம் தெரிவிக்க அவர்கள் வாழப்பாடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் போக்சோ சட்டத்தில் அய்யனார் கைது செய்யப்பட்ட இந்த வழக்கு சேலம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் மீதான விசாரணைகள் முடிந்த நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட அய்யனாருக்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு வழங்கினார். அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பு அப்பகுதியில்வரவேற்கப்பட்டது. எனினும், பெற்றோர் தங்களது குழந்தைகள் எங்கு செல்கிறார்கள், யாருடன் பேசுகிறார்கள், யார் அணுகுகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டுமென்பது முக்கியமான ஒன்றாகும்.

author avatar
CineDesk