73 வயது மூதாட்டி திருமணம் செய்ய ஆரோகியமான மணமகன் தேவை..!

0
115

73 வயதான பாட்டி ஒருவர் மறுமணம் செய்து கொள்ள தனக்கு ஆரோக்கியமான மணமகன் தேவை என விளம்பரம் செய்து கொண்ட ருசிகர சம்பவம் மைசூரில் அரங்கேறியுள்ளது.

நாம் வாழும் இந்த வாழ்க்கை குடும்பம் என்னும் உறவால் பிணைக்கப்பட்டுள்ளது. தாய்-தந்தை, கணவன் மனைவி, பெற்றோர் – பிள்ளைகள், உற்றார் – உறவினர்கள் என அனைவரும் ஒருவருக்கு ஒருவர் துணையாகவும், ஆறுதலாகவும் இருந்து அன்பு செய்து வந்தாலே வாழும் வாழ்க்கை சொர்க்கமாக அமையும். அதிர்ஷ்டவசமாக சிலருக்கு அந்த பாக்கியம் கிடைப்பதில்லை. ஏதோ ஒரு சம்பவத்தாலும், காரணத்தாலும் தனது உறவினர்களை இழந்து தனிமையில் வாடும் சிலர் மன உளைச்சலுக்கு உள்ளாவது உண்டு. ஆணாகட்டும், பெண்ணாகட்டும் இளைமை காலத்தில் இல்லையென்றாலும் முதுமையில் தனக்கு என ஒரு துணை இருப்பது தேவையான ஒன்றாகும்.

அவ்வாறு தனக்கு என எந்தவித துணையும் இன்றி தனிமையில் வாடி வரும் மூதாட்டி ஒருவர் தனக்கான துணையை தேடுவதில் தீவிரம் காட்டி வருகிறார். மைசூரை சேர்ந்த 73 வயது மூதாட்டி அரசு பணியிலிருந்து ஓய்வுபெற்றவர். பெற்றோரை இழந்து தனிமையில் வசித்து வரும் இவர் வயது முதிர்ந்த நிலையில் மறுமணம் செய்து கொள்ள முன்வந்துள்ளார். ஆரோக்கியமான, திடகாத்திரமான 73 வயதுக்கு மேற்பட்ட ஆண்மகன் மறுமணம் செய்துக் கொள்ள தன்னை அணுகலாம் என்று விளம்பரம் செய்துள்ளார். வயது முதிர்ந்த நிலையில் தனிமையில் இருப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாவதால் மறுமணம் செய்து கொள்ள விரும்புவதாக தனது விளம்பரத்தில் கூறியுள்ளார்.

73 வயதான பிராமண வகுப்பை சேர்ந்த தனக்கு அதே வகுப்பை சேர்ந்தவர் மணமகனாக வேண்டும் என்றும் விளம்பரத்தில் அந்த மூதாட்டி குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அந்த மூதாட்டி, “எனக்கு 13 வயதில் திருமணம் நடந்த சில ஆண்டுகளிலேயே எனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றேன், அதன்பின்னர் என்னுடைய பெற்றோருடனேயே வசித்து வந்தேன். நன்றாக படித்து அரசு வேலையும் கிடைத்தது. பெற்றோருடன் வசித்து வந்த நான் சொந்த வீடு வாங்கினேன். ஆனால், வயதான எனது பெற்றோர் உயிருடன் இல்லை என்பதால் நான் தனிமையில் இருந்து வருகிறேன். என்னுடைய பெரிய வீட்டில் தனியாக இருப்பது என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. தனிமையும் மிகவும் கொள்கிறது “ என கூறியுள்ளார்.

மேலும், தனது தனிமை காரணமாகவே தான் மறுமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், எனக்கு பிள்ளைகள் இல்லை என்றும் கூறும் அந்த மூதாட்டி நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், திடகாத்திரமாகவும் இருக்கும் 73 வயதுக்கு மேற்பட்டவர் மணமகனாக வேண்டுமென கூறியுள்ளார். தன்னுடைய வயதானவராக மணமகன் இருந்தால் தன் மனதை புரிந்து கொண்டு ஆறுதலாக இருப்பார் என்றும் மூதாட்டி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

73 வயது மூதாட்டி ஒருவர் தனதுக்கு ஆரோக்கியமான மணமகன் தேவை என விளம்பரம் அளித்திருப்பது மைசூரில் பரபரப்படைந்தது.

author avatar
CineDesk