ஈரோடு மாவட்டத்தில் வீட்டில் பொங்கல் வைக்க சென்றவர் பலி! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

0
85
A bangle dealer tragically lost his life in Thoothukudi district! This is the reason!
A bangle dealer tragically lost his life in Thoothukudi district! This is the reason!

ஈரோடு மாவட்டத்தில் வீட்டில் பொங்கல் வைக்க சென்றவர் பலி! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

ஈரோடு மாவட்டம் வி.வி.சி.ஆர் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் ராமன் குட்டி நாயர். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் இதில் இளைய மகன் மனோஜ் என்கிற மனோஜ் குமார் (42). இந்நிலையில் மனோஜ் குமார் வீட்டில் மாடியில் பொங்கல் வைப்பதற்காக பொருட்களையும் தயார் செய்து கொண்டிருந்தார். பின்னர் அடுப்பை பற்ற வைத்த போது எதிர்பாராத விதமாக மனோஜ் என்கிற மனோஜ் குமாரின் உடலில் தீ பிடித்தது. இப்போது மனோஜ் குமார் அலறினார் அவர் சத்தம் கேட்டு கீழே இருந்து அவரது குடும்பத்தினர் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி மனோஜ் என்கிற மனோஜ் குமாரின் உடலில் பற்றிய தீயை அனைத்தனர்.

மேலும் 108 ஆம்புலன்ஸ் தகவல் தெரிவிக்கப்பட்டு சிகிச்சைக்காக மனோஜ் குமாரை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அரசு மருத்துவமனையில் மனோஜ் குமார்ருக்கு சிகிச்சை அளிப்பதற்கு போதிய வசதி இல்லாத காரணத்தால் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மனோஜ் குமாருக்கு தீவிர சிகிச்சை பிரிவு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மனோஜ் குமார் பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது மேலும் சம்பவ இடத்திற்கு அந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.