தூத்துக்குடி மாவட்டத்தில் தெருவில் நடந்து சென்ற பள்ளி மாணவனுக்கு நேர்ந்த அநியாயம்! கோபத்தில் அப்பகுதி மக்கள்!

0
233
injustice-happened-to-a-school-student-who-walked-on-the-street-in-tuticorin-district-angry-local-people
injustice-happened-to-a-school-student-who-walked-on-the-street-in-tuticorin-district-angry-local-people

தூத்துக்குடி மாவட்டத்தில் தெருவில் நடந்து சென்ற பள்ளி மாணவனுக்கு நேர்ந்த அநியாயம்! கோபத்தில் அப்பகுதி மக்கள்!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட சாத்தான்குளம் மாணிக்கவாசகபுரம் தெருவை சேர்ந்தவர் சுடலை. இவரது மகன் முத்துமணி கண்டபிரபு (13). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துமணி தெருவில்  நடந்து சென்று கொண்டிருந்தார்.  அப்போது  அதே பகுதியில் சாத்தான்குளம் காந்திநகர் தேர்வை சேர்ந்த செல்வம் மகன் முத்து பிரசாந்த் (28). இவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராத விதமாக முத்து மணிகண்ட பிரபு மீது மோதியுள்ளார்.

இந்த விபத்தில் முத்து மணி கண்ட பிரபுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில் அவர் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து முத்துமணி கண்ட பிரபுவின் தாயார் முத்துலட்சுமி சாத்தான்குளம் போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின்  பேரில் சாத்தான்குளம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜான்சன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் பள்ளிக்குச் சென்ற மாணவனுக்கு நேர்ந்த கொடுமையை கண்டு அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Previous articleரசிகர்களுக்கு குஷி செய்தி… ஆசியக் கோப்பையில் 3 முறை பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா?
Next articleமாணவி ஸ்ரீமதி வழக்கு: தாளாளர் மகன்கள் இரண்டு பேரை விசாரணை வளையத்திற்குள் போலீசார் ஏன் இன்னும் கொண்டு வரவில்லை? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்  கேள்வி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here