ஆற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு! அச்சத்தில் பகுதி மக்கள்!
தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே செய்யாமங்கலம் தனியார் செங்கல் கானாவாய் அருகில் காவிரி ஆறு ஒன்று உள்ளது. அதன் தென்கரையில் சடலம் ஒன்று கிடைப்பதாக அப்பகுதி மக்கள் பாரத் பாதுகாப்பு குடி விஏஓ கருணாகரனுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த விஏஓ போலீசார்களுக்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சோதனை செய்தபோது அது அழுகி நிலை உள்ள ஆண் சடலம் என்று தெரிய வந்தது.
மேலும் அந்த ஆண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அவர் வெள்ளை நிற அரசு கலர் கோடு போட்ட சட்டை அணிந்திருந்தார் என்பதும் சிமெண்ட் கலர் பேண்ட்டும் அணிந்திருந்தார் என்றும் போலீசார் அடையாளம் தெரிவித்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து விஏஓ கருணாகரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து எஸ்ஐ ஐயாபிள்ளை விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் அவர் யார் எதற்காக அந்த பகுதிக்கு வந்தார் என்பது தெரியவில்லை. போலீசார் தீவிர விசாரணை ஈடுபட்டுள்ளனர். திடீரென அழகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.