இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி.. இளம் வீரர்களுக்கு வாய்ப்புக் கிடைக்குமா?

0
379

இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி.. இளம் வீரர்களுக்கு வாய்ப்புக் கிடைக்குமா?

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடக்க உள்ளது.

இந்திய அணி ஜிம்பாப்வே கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரண்டையும் வென்றுள்ள இந்திய அணி 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை வென்றுள்ளது.

அதனால் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடக்கும் போட்டியில் இதுவரை தொடரில் வாய்ப்பளிக்கப்படாத ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் ராகுல் திரிபாட்டி ஆகியோருக்கு இந்த போட்டியில் வாய்ப்பளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய நேரப்படி 12.45 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. இறுதிப்போட்டியையும் வென்று இந்திய அணி ஜிம்பாப்வே அணியை வொயிட்வாஷ் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிம்பாப்வே உத்தேச அணி

இன்னசென்ட் கையா, டகுட்ஸ்வானாஷே கைடானோ, வெஸ்லி மாதேவெரே, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, ரெஜிஸ் சகப்வா ரியான் பர்ல், லூக் ஜாங்வே, பிராட் எவன்ஸ், விக்டர் நியுச்சி, தனகா சிவாங்கா

இந்தியா உத்தேச அணி

ஷிகர் தவான் / ருத்துராஜ் கெய்க்வாட், கே.எல். ராகுல் (கேட்ச்), ஷுப்மான் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடா/ ராகுல் திரிபாட்டி, சஞ்சு சாம்சன் (வி.கே.), அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர்/தீபக் சாஹர், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்/அவேஷ் கான்

Previous articleஅவர்கள் இருவரும் இல்லாததை பாகிஸ்தான் அணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்… மூத்த வீரர் அறிவுரை
Next articleஇன்று காலை 11 மணிக்கு  முக்கிய அறிவிப்பு… ஜெயிலர் அப்டேட் கொடுத்த சன் பிக்சர்ஸ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here