விமான பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! உடனே இதனை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்!

0
109
Important information for air travelers! Listen to it now and find out!
Important information for air travelers! Listen to it now and find out!

விமான பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! உடனே இதனை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்!

கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் விமான சேவைகள் அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. மக்கள் வெளிநாடுகளுக்கு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. அதனை அடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைய தொடங்கியது. அதனால் மீண்டும் படிப்படியாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த வாரங்களில் மாண்டஸ் புயலின் காரணமாக வானிலை சரியாக இல்லாத காரணத்தினாலும் மழை அதிக அளவு பொழிந்து வந்ததால் விமான சேவைகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. மேலும் ஜனவரி மாதத்தில் தான் மீண்டும் விமான சேவை தொடங்கியது.இந்நிலையில் வட இந்தியா முழுவதும் கடுமையான பனிப்பொழிவு உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் இந்த குளிர்கால நிலவி வருவதால் பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே செல்கின்றது.விமான நிலையங்களில் உள்ள அதிகாரிகள் கூறுகையில் அனைத்து விமான இயக்கங்களும் தற்போது சீராக இயங்கி வருகின்றது. இருப்பினும் விமானங்களில் சமீபத்தில் தகவல் மற்றும் அடுத்த இயக்கம் உள்ளிட்ட விவரங்களை பயணிகள் விமான நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு அவற்றை பற்றி கேட்டு அறிந்து கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.