சுயதொழில் செய்பவர்களா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் சலுகை! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! 

0
319

சுயதொழில் செய்பவர்களா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் சலுகை! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! 

இன்று நடந்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் சுய தொழில் செய்பவர்களுக்கான அதிரடி வரிச்சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று இரண்டாவது நாளாகும். இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம் பட்ஜெட் தாக்கல் செய்து பேசி வருகிறார். இதில் சுயதொழில் செய்பவர்களுக்கான அறிவிப்புகளை தற்போது வெளியிட்டுள்ளார். அதன்படி

1. சுயதொழில் செய்து வருமானம் ஈடுபவர்களின் மாத வருமானம் ரூ.58, 250 ஆக இருந்தால் அவர்கள் வரி செலுத்த தேவையில்லை.

2. புதிய வருமான வரி திட்டத்தின் கீழ் மாதம் ரூபாய் 62500 வரை சம்பளம் பெறுபவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை.

3. சிறு குறு நடுத்தர பிரிவினர் மேம்படும் வகையில் 9000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறு, குறு,  கடன்களுக்கான வட்டி  1% ஆக குறைக்க நடவடிக்கை.

4. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சிறு மற்றும் குறு தொழில்களுக்கு பிணையில்லா கடன் வழங்கப்படும்.

5. 47 லட்சம் இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் திட்டம் செயல்படுத்தப்படும்.

6. மகளிர் குழுக்கள் ஒரு லட்சம் ஏற்படுத்தப்படும். வங்கி சேவைகள் அவர்களுக்கு  கிடைக்க  வங்கி சேவை சட்டங்கள் எளிதாக்கப்படும்.

7. இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்க 30 பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும்.

இந்த பட்ஜெட்டில் டீசல் பெட்ரோல் விலை குறித்து ஒரு வரி கூட இடம்பெறவில்லை.

நடப்பு நிதி ஆண்டில் மூலதன செலவினங்களுக்கான நிதி 33 சதவீதம் அதிகரிப்பு.

 

Previous articleடிவி மொபைல் போன் பைக்  விலை குறைகிறது! பட்ஜெட் 2023-2024 இன் அதிரடி சலுகைகள்! 
Next articleபுலம் பெயர்ந்த தொழிலாளர்களின் கவனத்திற்கு! ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் இன்று முதல் அமல்! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here