கூட்டம் கூட்டமாக வருகின்றன:பயிர்களை நாசம் செய்து செல்கின்றன!வெட்டுக்கிளி தாக்குதால் பாகிஸ்தானில் அவசரநிலை!

0
117

கூட்டம் கூட்டமாக வருகின்றன:பயிர்களை நாசம் செய்து செல்கின்றன!வெட்டுக்கிளி தாக்குதால் பாகிஸ்தானில் அவசரநிலை!

வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக வந்து கோதுமை பயிர்களைத் தாக்குவதால் பாகிஸ்தானில் விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானின் தெற்கே அமைந்துள்ள சிந்து மாகாணம்  முதல் வடகிழக்குப் பகுதியான கைபர் பக்துவா உள்ள விவசாயிகள் கோதுமைப் பயிர் செய்துள்ளனர். இந்நிலையில் அறுவடைக்காலம் நெருங்கியுள்ள நிலையில் கூட்டம் கூட்டமாக வரும் வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்கின்றன. இதனால் பல லட்சம் ஹெக்டேர்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் நாசமாகி விவசாயிகளுக்குக் கோடிக்கணக்கில் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.  

விவசாயிகளும் எவ்வளவோ முயற்சி செய்தும் வெட்டுக்கிளிகள் தாக்குதலை கட்டுப்படுத்த முடியவில்லை. சிறிய ரக விமானங்கள் மூலமாக பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் நிலைமை இன்னும் கட்டுக்குள் வரவில்ல. இதையடுத்து பாகிஸ்தானின் தகவல் துறை மந்திரி ஃப்ர்டோஸ் அஸ்க்யூ அவான் அவசரநிலை பிரகடனப்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் வெளியான காப்பான் படத்தில் இதுபோல வெட்டுக்கிளிகளின் தாக்குதலால் பாதிக்கப்படும் விவசாயிகள் சம்மந்தப்பட்ட காட்சிகள் வைக்கப்பட்டு இருந்தன. இப்போது அது பாகிஸ்தானில் உண்மையிலேயே நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K