தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரொனா சிகிச்சை-யில் இருந்த ஒருவர் பலி!!

0
145
#image_title

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரொனா சிகிச்சை-யில் இருந்த ஒருவர் பலி!!

தூத்துக்குடி பாத்திமா நகர் பகுதியை சேர்ந்த சேவியர் மகன் பார்த்திபன்(54) என்பவருக்கு நூரையீரலில் கட்டி இருந்ததால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனை-யில் சிகிச்சை-க்கு அனுமதிக்கப்பட்ட-போது அங்கு அவருக்கு கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சோதனையில் அவருக்கு கொரொனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அவரை கடந்த மாதம் 23–3.2023-ம் தேதி அன்று கொரொனா தொற்று காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை-க்கு அனுமதிக்கப்பட்டன. இந்நிலையில் கொரொனா சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

தூத்துக்குடியில் மீண்டும் கொரொனா பரவல் ஆரம்பித்து இருப்பதும் அதில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் குறித்த செய்தியும் மக்கள் மத்தியில் பதட்டத்தினை ஏற்படுத்தி உள்ளது.