வரிசையாகக் கலக்கும் இளம்வீரர்!திறக்குமா இந்திய அணியின் கதவு?

0
277

வரிசையாகக் கலக்கும் இளம்வீரர்!திறக்குமா இந்திய அணியின் கதவு?

மும்பை அணிக்காக ரஞ்சி போட்டியில் விளையாடும் சர்பராஸ் கான் சிறப்பாக விளையாடி தனது திறமையை நிரூபித்து வருகிறார்.

தற்போது மாநில அணிகள் பங்கேற்கும் ரஞ்சி போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒரு வீரராக சர்பராஸ் கான் உருவாகி வருகிறார். சர்பராஸ் கான் என்ற பெயர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பழக்கப்பட்டது. பெங்களூர் அணிக்காக ஐபிஎல்-ல் சில போட்டிகளிலும் இந்திய அணிக்காக சில போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஆனால் மோசமான பார்ம் காரணமாக அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு உள்ளூர் போட்டிகளில் விளையாடி தனது திறமையை நிரூபித்து வருகிறார்.

முன்னதாக உத்தர பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் முச்சதம் அடித்த அவர், அடுத்த போட்டியில் இமாச்சல பிரதேசம் அணிக்கெதிராக ஆட்டமிழக்காமல் 226 ரன்கள் விளாசினார். இதனால் அவர் மீதான கவனம் உருவான நிலையில் தற்போது இமாச்சலப் பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் சதம அடித்துள்ளார். இதன் மூலம் நான்கு போட்டிகளில் 800 ரன்களை சேர்த்துள்ளார்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் தனக்காக வாய்ப்புக்காக கதவைத் தட்ட ஆரம்பித்துள்ளார். கீப்பிங் செய்யும் திறமையும் இருப்பதால் ரிஷப் பண்ட் மற்றும் சஹா ஆகியோருக்கான மாற்று வீரராக இவர் தேர்வு செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது.

Previous articleஆதீனத்தை நடந்து செல்ல வைத்த திராவிடர் கழகத்தினர்:பல்லக்குப் போராட்டம் வெற்றி!
Next articleராமாவரத்தில் வைத்து ரஜினியை அடித்தாரா எம் ஜி ஆர்?ரகசியத்தை பகிர்ந்துகொண்ட மெய்க்காபாளர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here