பள்ளி மாணவியை கற்பழித்த திமுக பிரமுகர்! திமுக உறுப்பினர் என்பதில் பெருமை கொள்வதாக விளம்பரம்..!!

0
162

பள்ளி மாணவியை கற்பழித்த திமுக பிரமுகர்! திமுக உறுப்பினர் என்பதில் பெருமை கொள்வதாக விளம்பரம்..!!

பள்ளி மாணவியை மது போதையில் திமுக செயலாளர் கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பன அள்ளி பகுதியில் சென்ற வாரம் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அந்த நேரத்தில் அரசு ஆண்கள் மேநிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவரும் அங்கு வந்துள்ளார். இருவருக்கும் ஏற்கனவே அறிமுகம் இருப்பதால் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது, சிறிது நேரத்தில் அந்த மாணவர்களின் நண்பர்களான ராஜா மற்றும் மஞ்சுநாத் ஆகியோர் காரில் வந்துள்ளனர். பேசிக்கொண்டிருந்த பள்ளி மாணவர் இவர்களுக்கு ஏற்கனவே நண்பர் என்பதால் குடிப்பதற்கு கூல்டிரிங்ஸ் கொடுத்துள்ளனர். குளிர்பானத்தை குடித்த மாணவி சிறிது நேரத்தில் மயக்கமடைந்துள்ளார்.

இதனையடுத்து, மாணவியை மருத்துவமனைக்கு ஏற்றிச் செல்வது போல் காரில் ஏற்றிக் கொண்டு, ஆந்திராவை பகுதியை ஒட்டி ரகசியமான இடத்திற்கு மாணவியை திட்டமிட்டு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், மயங்கிய நிலையில் இருந்த மாணவியை அவரது நண்பரும், ராஜா மற்றும் மஞ்சுநாத் ஆகிய மூவரும் சேர்ந்து கற்பழித்துள்ளனர்.

சிறிது நேரத்திற்கு பிறகு மயக்கம் தெளிந்த மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமையை எண்ணி கதறி அழுதுள்ளார். அங்கிருந்து உடனடியாக தப்பித்து வீட்டுக்கு வந்தவுடன், பெற்றோர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்துள்ளார் இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், உடனடியாக மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

புகாரின் அடிப்படையில் 11 ஆம் வகுப்பு மாணவனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடிவந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜா மற்றும் மஞ்சுநாத்தை போலீசார் கைது செய்தனர். ராஜா என்பவர் வேப்பன அள்ளி பகுதியின் திமுக இளைஞரணி ஒன்றிய செயலாளர் என்று கூறப்படுகிறது. சம்பவத்தின் போது இந்த இருவரும் குடிபோதையில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் குளிர்பானத்தில் திட்டமிட்டு மதுவை கலந்து கொடுத்ததும் தெரியவந்துள்ளது.

திமுக கட்சியினர் இதுபோன்ற ஆபாச செயல்களிலும், குற்றங்களிலும் ஈடுபட்டு வருவது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. சமீபத்தில் மனைவியை பிரிந்து தன்னை விட 16 வயது அதிகமான பெண்ணுடன் திமுக பிரமுகர் வைத்திருந்த கள்ளக்காதல் சம்பவமும் குறிப்பிடத்தக்கது.