சிப்ஸ் பஜ்ஜி வாங்க கூட ஆம்புலன்சில் செல்லலாம்!! அதுவும் சைரனை அடித்தபடி நெரிசலில் தப்பிக்க புதுவித டெக்னிக்!!
நோயாளி இல்லாத ஆம்புலனஸ் ஓட்டுனர் பஜ்ஜி, டீ வாங்க சைரன் அடித்தபடி சென்று உள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள ஜங்சன் பகுதியில் கடந்த திங்கள் இரவு ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக சைரன் ஒலித்தபடி சென்றது. இதை கவனித்த போக்குவரத்து காவலர் வாகனங்களை நகரச் செய்து ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தார்.
அந்த ஆம்புலன்ஸ் சென்று அருகில் உள்ள உணவகம் ஒன்றின் முன் நின்றது. அதில் நோயாளி யாரும் இல்லை. ஆனால் சைரன் மட்டும் ஒலித்தபடி சென்றது. இதனால் ஆம்புலன்ஸ் டிரைவரிடம் நடந்த விசாரணையில் அவசரமில்லாத சூழலில் அவர் சைரனை பயன்படுத்தியது தெரிய வந்தது. போக்குவரத்து விதியை மீறி அவர் நெரிசலில் சிக்காமல் இருக்கசைரனை பயன்படுத்தியது தெரிய வந்தது. மேலும் போக்குவரத்து விதிமீறலை மறைக்கவும் அவர் முயற்சி செய்துள்ளார்.
அந்த வாகனம் சிக்னலில் இருந்து 100 மீ தொலைவில் உள்ள உணவகத்தில் நின்றது.இதை கவனித்த காவலர் ஆம்புலன்சில் அவசர சூழலோ நோயாளியோ இல்லை.அப்புறம் எதற்கு சைரன் என கேட்டதற்கு நர்ஸ் ஒருவருக்கு சுகாதார பாதிப்பு ஏற்பட்டது என கூறியுள்ளார்.
போக்குவரத்து காவலர் உடலுடன் இணைக்கப்பட்ட வீடியோ கேமரா உதவியுடன், நடந்த விசயங்களை படம் பிடித்து உள்ளார். அவர் ஓட்டுனரிடம், சைரன் ஒலித்ததும் ஆம்புலன்சுக்கு வழிஏற்பாடு செய்து கொடுத்தேன். ஆனால் நீங்கள் மருத்துவமனை செல்லாமல் பஜ்ஜி டீ சாப்பிட்டு கொண்டு இருக்கிறீர்கள் ?? நோயாளி எங்கே?? பஜ்ஜி சாப்பிட சைரன் அடித்து செல்கிறீர்களா?? இதுப் பற்றி உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை, மற்றும் வீடியோ அனுப்ப போகிறேன் என கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
#TelanganaPolice urges responsible use of ambulance services, citing misuse of sirens. Genuine emergencies require activating sirens for swift and safe passage. Strict action against abusers is advised.
Together, we can enhance emergency response and community safety. pic.twitter.com/TuRkMeQ3zN
— Anjani Kumar IPS (@Anjanikumar_IPS) July 11, 2023