Breaking News

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் மின் இணைப்பு துண்டிப்பு!! அதிர்ச்சியில் மக்கள்!! 

Electricity disconnection in all districts in Tamil Nadu!! People in shock!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் மின் இணைப்பு துண்டிப்பு!! அதிர்ச்சியில் மக்கள்!!

தமிழகத்தில் மாதம் தோறும் பராமரிப்பு பணிகளுக்கு மின்தடை ஏற்படும். மற்ற நேரங்களில் தமிழக அரசு தடையில்லா மின்சார சேவையை வழங்கி வருகிறது.  இந்த நிலையில் தமிழகத்தில் லட்சக்கான மின் மீட்டர்கள் பழுதடைந்து உள்ளதாக தகவல் வந்துள்ளது. அதனையடுத்து தமிழக மின் வாரியம் அனைத்து மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு புதிய உத்தரவை வெளியிட்டது.

அந்த உத்தரவில் பழுதடைந்த 2.06 லட்சம் மீட்டர்களை உடனடியாக சரி செய்து தருமாறு தெரிவித்துள்ளது. மேலும் ஒருமுனை பிரிவில் 1.74 லட்சமும்,  மும்முனை பிரிவில் 32,000 மீட்டர்களில் குறைபாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த மாதம் மின் கட்டணத்தை செலுத்தாமல் ஆயிரத்திற்கும் மேல் உள்ளதாக வின் வாரியம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து ஜூலை 12 ஆம் தேதி வரை 56,565 பேர் கால அவசத்தையும் தாண்டி மின் கட்டணம் செலுத்தாமல் உள்ளார்கள். அதனை தொடர்ந்து தமிழகத்தில் 47.26 கோடி ரூபாய் மின் கட்டணம் செலுத்தாமல் உள்ளார்கள். ம

இதனையடுத்து மின் வாரியம் அவர்களின் மின் இணைப்பிகளில் மின் விநியோகத்தை துண்டிகுமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும் துண்டிப்பது மட்டுமல்லாமல் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் அந்த உத்தரவில் தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் மீட்டர்களை விரைவில் மாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.