ஆளுநர் அந்த பக்கம் டெல்லி போனதும் இந்த பக்கம் வந்து நிற்கும் அமலாக்கத்துறை !! விடிய விடிய விசாரணை நடந்தது என்ன??

0
42
When the governor goes to that side of Delhi, the enforcement department comes to this side!! What happened to the dawn investigation??
When the governor goes to that side of Delhi, the enforcement department comes to this side!! What happened to the dawn investigation??

ஆளுநர் அந்த பக்கம் டெல்லி போனதும் இந்த பக்கம் வந்து நிற்கும் அமலாக்கத்துறை !! விடிய விடிய விசாரணை நடந்தது என்ன?? 

அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறையினர் விடிய விடிய விசாரணை நடத்தினர்.

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை திடீரென அதிரடி சோதனை நடத்தினர். பின்னர் அவரை தங்களது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். காலை முதல் மாலை வரை 13 மணி நேர விசாரணைக்கு பின் அமைச்சரை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அவரது காரிலேயே அழைத்துச் சென்று அங்கே அவரிடம் தனி அறையில் விசாரணை செய்தனர்.

அமைச்சர் வீட்டில் இருந்து ஆவணங்கள் மற்றும் வெளிநாட்டு கார் ஆகியவற்றை அதிகாரிகள் அலுவலகம் எடுத்துச் சென்றனர். இரவு 8 மணி முதல் அமைச்சர் பொன்முடியிடம் தொடங்கிய விசாரணை விடிய விடிய நடைபெற்று காலை 8 மணி அளவில் முடிவுற்றது. மேலும் அவரது விழுப்புரம் மற்றும் சென்னை இல்லங்களில் நடைபெற்ற சோதனைகளும் நிறைவடைந்தன. நேற்று காலை 7 மணி முதல் நடந்த 19 மணி நேர சோதனை ஒருவழியாக முடிந்தது.

பின்னர் அமைச்சர் தனது வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். மேலும் அவரை இன்று மாலை 4 மணி அளவில் மீண்டும் அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளனர். இந்த நிலையில் அமைச்சர் பொன்முடியின் வக்கீல் சரவணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். நேற்று இரவு தொடங்கிய விசாரணை இன்று அதிகாலை 3.30 மணிக்கு நிறைவடைந்திருக்கிறது. அவருக்கு வயது 72. அவருக்கு சில உடல்நலக்குறைவும் இருக்கிறது. இப்படித்தான் மனிதாபிமானமற்ற முறையில் அதிகாரிகள் விசாரிப்பார்களா?

அவருக்கு மன உளைச்சலை, உடல் உளைச்சலை இது  கட்டாயம் ஏற்படுத்தியிருக்கும். இப்படி செய்யக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு சொல்லியிருக்கிறது. இந்த ஸ்டேட்மெண்டை மறுநாள் காலை வாங்கினால் என்ன ஆகிவிட போகிறது? ஆதாரங்கள் ஏதாவது அழிந்துவிடவா போகிறதா? இது அமலாக்கத்துறை அலுவலகமா, சித்ரவதை கூடமா? என அவர் கேள்வி எழுப்பினார்.

தி.மு.க. அமைச்சர்கள் மீது 20 வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட வழக்குகள் மட்டுமே இவர்கள்   கண்ணுக்கு தெரிகிறதா? கடந்த 10 ஆண்டு அதிமுக அமைச்சர்கள் செய்த தவறுகள் எதுவும்  தெரியவில்லையா? கவர்னர் ஆர்.என்.ரவியை தொடர்ந்து கொள்கை ரீதியாகவும், அரசு ரீதியாகவும் எதிர்த்து வந்தவர், பொன்முடி அவர்கள்.

கவர்னர் ஒருவாரம் டெல்லி சென்றார். இப்போது அமலாக்கத்துறை வந்து நிற்கிறது. 2007-ம் ஆண்டு நடந்த வழக்குக்கு, 2023-ம் ஆண்டில் விசாரணை நடத்தினால் எந்த ஆதாரம் கிடைக்கும்? இது யாரை ஏமாற்றும் வேலை? இருந்தாலும் அதிகாரிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் அமைச்சர் பொன்முடி தெளிவான பதில்களை கொடுத்திருக்கிறார். அவர் இன்று மாலை மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜர் ஆகிறார்  என அவர் தெரிவித்தார்.