வீட்டில் தரித்திரம் நீங்கி செல்வம் பெருக சில வழிகள்!! 100% பலன் கொடுக்கும்!!

0
149
#image_title

வீட்டில் தரித்திரம் நீங்கி செல்வம் பெருக சில வழிகள்!! 100% பலன் கொடுக்கும்!!

நம்மில் பலருக்கு கை நிறைய சம்பாதித்தாலும் பண பிரச்சனை,அதன் தேவை அதிகம் இருக்கிறது.சம்பளம் வாங்கிய உடனே தேவையில்லா செலவு ஏற்படுகிறது.எவ்வளவு முயன்றாலும் பணத்தை சேமிக்க முடியவில்லை என்ற வருத்தம் அனைவரிடத்திலும் இருக்கிறது.இதற்கு காரணம் கண் திருஷ்டி மற்றும் வீட்டில் தரித்திரம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு வீட்டில் செல்வம் செழிக்க சில வழிகளை கடைபிடியுங்கள்.

வீட்டில் தரித்திரம் நீங்கி செல்வம் பெருக வழிகள்:-

*ஒரு மஞ்சள் பூசப்பட்ட காட்டன் துணியில் பச்சைக் கற்பூரம்,சோம்பு,ஏலக்காய் சேர்த்து மூட்டையாக கட்டி வீட்டின் குபேர மூலையில் வைத்து அதற்கு தீபம் காட்டி வழிபட்டு வந்தால் வீட்டில் எப்பொழுதும் பணம் நிறைந்து காணப்படும்.

*வீட்டில் உள்ள பூஜை அறையில் விளக்கு அல்லது குத்து விளக்கு ஏற்றும் பொழுது இரண்டு திரிகளை போட்டு தீபம் ஏற்றினால் பணம் கஷ்டம் நீங்கி செல்வம் அதிகம் பெருகும்.

*அத்தியாவசிய பொருட்களான உப்பு,பருப்பு,புளி போன்றவை வீட்டில் எப்பொழுதும் குறையாமல் பார்த்து கொள்ளுங்கள்.ஒருவேளை அவை குறைந்தாலோ,காலியானாலோ வீட்டில் தரித்திரம் உண்டாகும்.அதேபோல் வீட்டை சுத்தம் செய்யும் பொழுது வரும் குப்பைகளை வீட்டின் மூலை முடுக்குகளில் சேர்த்து வைப்பதை முற்றிலும் தவிருங்கள்.இப்படி குப்பைகளை சேர்த்து வைப்பதால் வீட்டில் தரித்திரம் உண்டாகும்.

*உங்கள் பணப் பையில் வாசனை பொருளான புதினாவின் 2 இலைகளை வையுங்கள்.இந்த புதினாவை 3 நாட்களுக்கு ஒரு முறை மாற்றவும்.இப்படி செய்தால் பணப் பிரச்சனை ஏற்படாமல் அவை பணம் அதிகளவில் சேரும்.