வெறும் 5 மணி நேரத்தில் தயிர் கெட்டியாக இந்த ஒரு பொருளை பாலில் சேருங்கள் போதும்!!

0
75
Just add this one product to milk to thicken curd in just 5 hours!!
Just add this one product to milk to thicken curd in just 5 hours!!

வெறும் 5 மணி நேரத்தில் தயிர் கெட்டியாக இந்த ஒரு பொருளை பாலில் சேருங்கள் போதும்!!

நம் அனைவருக்கும் பிடித்த உணவுப் பொருட்களில் ஒன்று தயிர். இவை உடலுக்கு குளிர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை அள்ளித் தருபவையாக இருக்கிறது. உடல் உஷ்ணத்தால் அவதிப்படும் நபர்கள், அல்சர் பாதிப்பு இருப்பவர்களுக்கெல்லாம்  வரப்பிரசாதம் இந்த தயிர். இவை பாலை வைத்து தயாரிக்கப்படும் உணவு வகையாகும்.

நன்கு காய்ச்சிய பாலை ஆறவைத்து சிறிதளவு உறை மோர் சேர்த்து தயிராக்குவதை தான் பெரும்பாலானோர் செய்து வருகிறோம். ஆனால் இவை கெட்டித் தன்மை இல்லாமல் இலகுவாக இருப்பதால் சிலர் விரும்பி உண்ணுவதில்லை. அதேபோல் சுவையும் அந்தளவிற்கு இருக்குமா என்பது சந்தேகம் தான். எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு பொருளை பாலில் சேர்த்தால் அவை கெட்டி தன்மையுடன் மிகவும் சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

*பால் – 1/4 லிட்டர்

*உறை மோர் – 2 தேக்கரண்டி

*கான் பிளவர்(சோள மாவு) – 2 தேக்கரண்டி

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1/4 லிட்டர் பால் ஊற்றிக் கொள்ளவும். அவற்றை மிதமான தீயில் காய்ச்சி அடுப்பை அணைக்கவும். காய்ச்சிய பாலை ஆற வைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு பவுலில் 2 தேக்கரண்டி அளவு உறை மோர் சேர்த்துக் கொள்ளவும். அடுத்து தயிர் கெட்டியாகவும் சுவையாகவும் கிடைக்க நாம் சேர்க்க வேண்டிய ஒரு பொருள் கான் பிளவர். இதை 2 தேக்கரண்டி அளவு எடுத்து உறை மோரில் சேர்த்து கலக்கி விடவும். இவ்வாறு செய்தால் உறை மோர் + கான் பிளவர் கலவை கெட்டியாகத் தொடங்கும்.

இந்த கலவையை காய்ச்சிய பாலில் சேர்த்து மெதுவாக கலக்கி விடவும். 5 மணி நேரத்திற்கு பின்னர் எடுத்து பார்த்தால் தயிர் கெட்டியாக வந்திருக்கும். இதை சாதத்தில் கலந்து சாப்பிட்டால் மிகவும் சுவையாகவும் ஆரோக்கியமான ஒன்றாகவும் இருக்கும்.

மண் பானையில் பாலை ஊற்றி தயிர் துவைய வைத்து சாப்பிட்டால் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். இந்த தயிரை பழைய சாதத்தில் ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து உண்டால் இதற்கு நிகரான சுவை இந்த உலகில் இருக்க முடியாது.

தயிர் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:-

*தயிரில் கார்போஹைட்ரேட், கொழுப்பு,புரதம், சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் ஏ, டி மற்றும் பி12 உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.

*செரிமானக் கோளாறு இருப்பவர்கள் தினமும் தயிரை உணவாக எடுத்து வருவது நல்லது.

*வயிற்றுப் போக்கால் அவதிப்படும் நபர்களுக்கு தயிர் சிறந்த உணவாக இருக்கும்.

*இதயம் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய தயிர் பெரிதும் உதவுகிறது.

*உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கு குறைவாக இருக்கும் பொழுது தயிர் சாப்பிடுவது சிறந்த பலனைக் கொடுக்கும்.

*சருமத்தை மிருதுவாகவும், பொலிவாகவும் வைத்துக் கொள்ள தயிரை பயன்படுத்துவது சிறந்த தீர்வாக இருக்கும்.

*வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண், அல்சர் பாதிப்பு இருக்கும் நபர்கள் தயிரை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது.