நாளை ஒரு நாள் பண பரிவர்த்தனை எதுவும் செய்ய முடியாது!! வங்கி வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

0
199
Shocking news for UPI users! Now if they use UP, they will be charged!!
Shocking news for UPI users! Now if they use UP, they will be charged!!

நாளை ஒரு நாள் பண பரிவர்த்தனை எதுவும் செய்ய முடியாது!! வங்கி வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

நவீன கால கட்ட முறையில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருகிறது.பெரும்பாலான மக்கள் பணத்தை கையிருப்பில் வைத்திக்கும் தேவை குறைந்துவிட்டது.எந்த பக்கம் திரும்பினாலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தான்.அந்த வகையில் யுபிஐ இல்லாத இடமே இல்லை என்று கூட கூறலாம்.மக்கள் டெபிட் கார்டு மூலம் பணம் எடுத்து உபயோகிப்பதற்கு பதிலாக தற்பொழுது யுபிஐ பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சில வங்கிகள் தங்களின் பராமரிப்பு பணிக்காக அறிவிப்புகளை அவ்வபோது வெளியிடுவது இயல்பு.அந்த வரிசையில் எச்டிஎப்சி வங்கியானது  வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மெயில் மூலம் நான்கு மற்றும் ஆறாம் தேதி டெபிட், கிரெடிட் மற்றும் யுபிஐ போன்ற எந்த வசதியும் செயல்படாது என்று தெரிவித்துள்ளனர்.இதனை அறியாத சில எச்டிஎஃப்சி பயனாளிகள் பணப் பரிவர்த்தனை செய்ய இயலவில்லை எனக்கூறி புகார் அளித்துள்ளனர்.

புகார் தொடர்ந்து வந்ததையடுத்து அந்த வங்கியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பை மீண்டும் வெளியிட்டுள்ளது.அதன்படி இந்த இரண்டு நாட்களில் மதியம் 12:30 மணியிலிருந்து 2:30 மணி வரை பண பரிவர்த்தனை செய்ய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அதற்கேற்றவாறு பொதுமக்கள் தங்களின் தேவை குறித்து திட்டமிட்டு பொதுமக்கள் தங்களின் தேவை குறித்து பண தேவையை முன்கூட்டியே எடுத்துக் கொள்ளும்படி கூறியுள்ளனர்.