சிறப்பு ரயில்கள் குறித்து தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு!!

Photo of author

By Vinoth

சிறப்பு ரயில்கள் குறித்து தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு!!

Vinoth

Southern Railway action notification about special trains!!

சென்னை: பலரும் எதிர்பார்த்த நிலையில் சிறப்பு ரயில்கள் தொடர்பான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோயில், இராமநாதபுரம் மற்றும் திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தாம்பரத்தில் இருந்து ஜனவரி 13ஆம் தேதி இரவு 10:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலானது மறுநாள் நண்பகல் 12:30 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடைகிறது.

அதேபோல் தாம்பரத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு ஜனவரி 11,13,18 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து 11ஆம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் அதிகாலை 5:15 மணிக்கு இராமநாதபுரம் சென்றடைகிறது.

தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு ஜனவரி 13,20,27 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில் ஆனது தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 3:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:55 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது.

இதே போல் சென்னை தாம்பரம் திருச்சி இடையே இன்று மற்றும் நாளை அதோடு 10,11,12,13,17,18,19 ஆகிய தேதிகளிலும் ஜென் சதாப்தி என பெயரிடப்பட்ட சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருச்சியில் இருந்து காலை 5:35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மதியம் 12:30 மணிக்கு தாம்பரத்தை வந்தடைகிறது.

மறுபக்கத்தில் தாம்பரத்தில் இருந்து மதியம் 3:35 புறப்படும் சிறப்பு ரயில் திருச்சிக்கு நள்ளிரவு 11:35 மணிக்கு சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் ஜனவரி 12,19 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அந்த ரயில் இரவு  11:30 மணிக்கு புறப்படும் மறுநாள் மதியம் ஒரு மணிக்கு நாகர்கோவிலை சென்றடைகிறது.