TVK தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு!!பரபரப்பை ஏற்படுத்தியது!!

தமிழ்நாடு சட்டசபையின் அண்மைய கூட்டத்தொடரில், ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதற்கு எதிராக, உரையை வாசிக்காமல் சட்டசபையை விட்டு வெளியேறினார். இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது தமிழகச் சட்டமன்றத்தின் ஆண்டாண்டு கால மரபு. பொன்விழா கண்ட தமிழகச் சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.

ஆளுநர் மாளிகை, தமிழ்த்தாய் வாழ்த்து மீது ஆளுநருக்கு எப்போதும் மரியாதை இருப்பதாகவும், தமிழ் கலாச்சாரத்தின் மீது அன்பும் மரியாதையும் இருப்பதாகவும் விளக்கமளித்துள்ளது.

சட்டமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஜனநாயக முறையில் நடைபெறும் விவாதங்களை, வெளிப்படையாகத் தமிழக மக்கள் தெரிந்துகொள்வது அவசியமாகும். எனவே சட்டமன்ற நிகழ்ச்சிகள் முழுவதையுமே எந்தவித இடையூறும் இல்லாமல் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம், சட்டமன்ற மரபுகள் மற்றும் ஆளுநர்-அரசு உறவுகள் குறித்து புதிய விவாதங்களைத் தூண்டியுள்ளது.