விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த அடுத்த ஜாக்பாட்!! ரூ.1.20 லட்சம் கடனுதவி!!

Photo of author

By Gayathri

தமிழக அரசு விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வாங்குவதற்காக ரூ.1.20 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்குவதற்கான திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடனுடைய வட்டி மற்றும் கால அளவை விவரமாக காண்போம்.

கடன் பெற தகுதியுடையவர்கள் :-

✓ பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க நினைப்பவர்களின் ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய் இருத்தல் வேண்டும்.

✓ வயதுவரம்பு 18 முதல் 60 வயதாக இருத்தல் வேண்டும்.

✓ மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய உறுப்பினராக இருக்க வேண்டும்.

✓ குடும்பத்தில் ஒருவர் மட்டுமே திட்டத்தின் கீழ் பயன்பட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெற நினைப்பவர்களுக்கு 2 மாடுகளை வாங்குவதற்கு கடன் வழங்கப்படும் என்றும் ஒரு மாட்டிற்கு 60,000 ரூபாய் என 1.20 லட்சம் ரூபாய் வழங்கப்படுவதாகவும் இதற்கான வட்டி விகிதம் 7 சதவிகிதம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

விண்ணப்பிக்கும் முறை :-

✓ ஜாதி சான்றிதழ், வருமானவரிச் சான்றிதழ் மற்றும் பிறப்பிட சான்றிதழ் இவற்றுடன் வங்கிகள் கேட்கக்கூடிய ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ இவற்றை விண்ணப்பங்களுடன் சமர்ப்பிக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது வங்கிகளுக்கு சென்ற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பால் தொழில் தொடங்க நினைப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்று பால் உற்பத்தியாளராக தங்களுடைய சுய தொழிலை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.