கடந்த 30 வருடங்களுக்கு முன்பு ஏழைகளின் உணவாக சிறுதானியங்கள் கருதப்பட்டது.தற்பொழுது அரிசி,கோதுமை போன்றவற்றின் பயன்பட்டால் சிறுதானிய உணவுகளின் பயன்பாடு குறைந்துவிட்டது.
இந்த சிறுதானியத்தின் அருமையை அறிந்தவர்கள் தினமும் ஒருவேளையாவது கஞ்சி,கூழ் என்று எடுத்துக் கொள்கின்றனர்.
சிறுதானியங்களின் பயன்கள்:
**உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.
**உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதை தடுத்து உடல் எடையை கட்டுப்படுத்துகிறது.உடலில் வாதம்,பித்தம்,கபம் போன்ற பிரச்சனைகளை கட்டுப்படுத்துகிறது.
**சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.காய்ச்சல்,மூட்டுவலி போன்றவற்றை குணப்படுத்துகிறது.
சிறுதானிய கஞ்சி தயாரிக்கும் முறை:
தேவைப்படும் பொருட்கள்:
1.சாமை – 50 கிராம்
2.வரகரிசி – 50 கிராம்
3.குதிரை வாலி – 50 கிராம்
4.சீரகம் – ஒரு தேக்கரண்டி
5.பூண்டு பற்கள் – எட்டு
6.சின்ன வெங்காயம் – நான்கு
7.உப்பு – தேவையான அளவு
8தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை விளக்கம்:
ஸ்டெப் 01:
முதலில் சாமை,வரகரிசி மற்றும் குதிரை வாலி ஆகிய ஒவ்வொன்றையும் தலா 50 கிராம் அளவிற்கு எடுத்து கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
ஸ்டெப் 02:
அடுத்து நான்கு சின்ன வெங்காயம் மற்றும் எட்டு பல் வெள்ளைப்பூண்டை தோல் நீக்கிவிட்டு தண்ணீரில் போட்டு அலசி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 03:
பிறகு ஒரு தேக்கரண்டி சீரகம் மற்றும் விருப்பப்பட்டால் கால் தேக்கரண்டி கருப்பு மிளகு எடுத்து உரலில் போட்டு கொரகொரப்பாக இடித்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 04:
அதன் பின்னர் அடுப்பில் குக்கர் வைத்து ஊறவைத்த சிறு தானியங்களை போட்டுக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 05:
பிறகு இடித்த சீரக மிளகு கலவையை அதில் சேர்க்க வேண்டும்.அதன் பிறகு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 06:
அடுத்து தங்களுக்கு தேவையப்பட்டால் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.அதன் பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடிவிட வேண்டும்.
ஸ்டெப் 07:
மூன்று முதல் நான்கு விசில் வரும் வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.பிறகு விசில் நின்றதும் சிறுதானிய கஞ்சியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி மல்லி தழை தூவி சாப்பிடலாம்.