குதிக்கால் வலியால் நடக்க முடியமால் சிரமப்படுறீங்களா? அப்போ இந்த இலையில் கசகசா வச்சி சாப்பிடுங்கள்!!

Photo of author

By Divya

குதிக்கால் வலியால் நடக்க முடியமால் சிரமப்படுறீங்களா? அப்போ இந்த இலையில் கசகசா வச்சி சாப்பிடுங்கள்!!

Divya

வயத்தவர்களுக்கு மட்டுமின்றி இளம் வயதில் இருப்பவர்களுக்கும் குதிகால் பகுதியில் கடுமையான வலி,எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.இந்த குதிகால் தொடர்பான பாதிப்புகள் குணமாக இங்கு சொல்லப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை செய்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:-

1)வெற்றிலை – ஒன்று
2)வெந்தயம் – கால் தேக்கரண்டி
3)கசகசா – கால் தேக்கரண்டி
4)சீரகம் – கால் தேக்கரண்டி

பயன்படுத்தும் முறை:-

ஸ்டெப் 01:

முதலில் ஒரு வெற்றிலை எடுத்து காம்பு நீக்கி கொள்ள வேண்டும்.பிறகு இதை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 02:

பிறகு இந்த வெற்றிலையில் கால் தேக்கரண்டி வெந்தயம்,கல் தேக்கரண்டி கசகசா மற்றும் கால் தேக்கரண்டி சீரகம் சேர்த்து மடித்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 03:

இந்த வெற்றலையை வெறும் வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் குதிகால் வலி மற்றும் பாத எரிச்சல் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)ஓமம் – ஒரு தேக்கரண்டி
2)சுக்கு – ஒரு தேக்கரண்டி
3)கல் உப்பு – சிறிதளவு
4)எலுமிச்சை தோல் – இரண்டு
5)தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்துங்கள்.அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி ஓமத்தை அதில் போட்டுக் கொள்ளுங்கள்.

ஸ்டெப் 02:

அடுத்து ஒரு தேக்கரண்டி சுக்கு,ஒரு தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து குறைவான தீயில் கொதிக்க வையுங்கள்.

ஸ்டெப் 03:

அடுத்து எலுமிச்சை தோல் இரண்டு போட்டு குறைந்த தீயில் கொதிக்க வைத்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.

ஸ்டெப் 04:

இந்த நீரை இளஞ்சூடு பக்குவம் வரும் வரை ஆறவிட வேண்டும்.பிறகு கால்களை இந்த நீரில் வைத்து ஐந்து நிமிடங்களுக்கு ஊறவிட வேண்டும்.இப்படி தினமும் இரவு செய்து வந்தால் குதிகால் வலி,எரிச்சல் நீங்கும்.