Breaking News, Health Tips

சாப்பிட்ட பிறகு ஒரு கிளாஸ் சூடு தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரிந்தால் ஆச்சர்யப்படுவீங்க!!

Photo of author

By Divya

நமது உடல் ஆரோக்கியத்திற்கு உணவு அவசியமான ஒன்றாகும்.ஆரோக்கிய உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நோய் பாதிப்புகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது எவ்வளவு முக்கியமோ அதேபோல் உணவு சாப்பிட்ட பிறகு வெது வெதுப்பான தண்ணீர் குடிப்பதும் முக்கியமான ஒன்றாகும்.

உணவு உட்கொள்வதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தால் பசி கட்டுப்படும்.அதேபோல் உணவு உட்கொண்ட பிறகு ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீர் குடித்தால் எளிதில் செரிமானமாகும்.

நீங்கள் உட்கொள்ளும் கடினமான உணவுகள் எளிதில் செரிமானமாக வெது வெதுப்பான தண்ணீர் பருகலாம்.நமது உடலில் எளிதில் செரிமானம் வேகமாக நடக்க அவசியம் சுடுநீர் குடிக்க வேண்டும்.உட்கொள்ளும் திட உணவு எளிதில் உடைந்து உறிஞ்சப்பட நீங்கள் அவசியம் வெது வெதுப்பான தண்ணீர் பருக வேண்டும்.

நாம் உட்கொள்ளும் திட உணவுகளை குடலால் உறிஞ்ச முடியவில்லை என்றால் அது நாளடைவில் கொழுப்பாக மாறிவிடும்.இது உடல் பருமன்,இரத்தக் குழாய் அடைப்பு,மாரடைப்பு போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.

திட உணவுகள் கொழுப்பாக மாறுவதால் உடல் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்படும்.புற்றுநோய் பாதிப்பு ஏற்படவும் அதிக வாய்ப்பிருக்கிறது.எனவே உணவு உட்கொண்ட 10 நிமிடங்களுக்கு பிறகு ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீர் அல்லது மூலிகை பானம்,சூடான சூப் செய்து குடிக்கலாம்.இதுபோன்ற ஆரோக்கிய பானங்கள் நமது உடலில் கழிவுகள் தேங்காமல் பார்த்துக் கொள்ளும்.

உணவிற்கு பின் குளிர்ந்த நீர் பருகினால் எண்ணெய் உணவு திடப் பொருளாக மாறிவிடும்.இதனால் செரிமான செயல்முறை மெதுவாகி பாதிப்பை உண்டாக்கிவிடும்.எனவே இனி உணவு உட்கொண்ட பின்னர் ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீர் குடிக்க வேண்டும்.

பலா பழத்தை விடுங்க.. பலா பிஞ்சு சூப் குடித்தால் உடலில் என்ன நடக்கும் தெரியுமா?

உடம்பு முழுக்க வியர்க்குரு கொப்பளமா இருக்கா? டோன்ட் பீல்.. குளிக்கும் நீரில் இந்த பொடியை கலந்துக்கோங்க!!