நம் மோசமான உணவுமுறை பழக்கங்களால் குடல் ஆரோக்கியம் பாழாகி வருகிறது.எனவே குடலில் இருக்கின்ற புழுக்களை வெளியேற்ற இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்களை பின்பற்றுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)வேப்பிலை – இரண்டு கொத்து
2)விளக்கெண்ணெய் – அரை தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
முதலில் இரண்டு கொத்து வேப்பிலையை நன்றாக வெயிலில் காயவைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து கிளாஸில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி அரைத்த வேப்பிலை பொடியை அதில் போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.
அதன் பின்னர் அரை தேக்கரண்டி அளவு விளக்கெண்ணையை அதில் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.பின்னர் இதை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
இந்த வேப்பிலை பானத்தை தொடர்ந்து பருகி வந்தால் குடலில் இருக்கின்ற புழுக்கள் வெளியேறிவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)பாகல் இலை – ஒரு கைப்பிடி
2)தண்ணீர் – ஒரு கப்
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு கைப்பிடி பாகல் இலையை வெயில் காயவைத்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இந்த பாகல் இலை பொடியை ஒரு டப்பாவில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி பாகல் இலை பொடி போட்டு மிக்ஸ் செய்து பருக வேண்டும்.
இந்த பாகல் பானத்தை பருகி வந்தால் குடலில் புழு உருவாகாமல் இருக்கும்.குடலில் இருக்கின்ற புழுக்கள் மலத்தில் வெளியேறும்.