இனி பல் ஈறுகளில் இரத்தம் கசிவு? தண்ணீரில் இதை போட்டு வாய் கொப்பளிங்க போதும்!!

Photo of author

By Divya

இனி பல் ஈறுகளில் இரத்தம் கசிவு? தண்ணீரில் இதை போட்டு வாய் கொப்பளிங்க போதும்!!

Divya

உங்கள் பல் ஈறுகள் வலிமை இழந்தால் இரத்தக் கசிவு,பல் கூச்சம்,பல் ஆடுதல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.எனவே பல் ஈறுகள் வலிமை அதிகரிக்க இந்த வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)கீழா நெல்லி இலை – ஒரு கப்
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

**தரமான கீழேநெல்லி இலைகளை சேகரித்துக் கொண்டு வர வேண்டும்.பின்னர் இதை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பின்னர் இதை பொடியாக நறுக்கி வெயிலில் உலர்த்தி எடுத்துக் கொள்ள வேண்டும்.

**பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பொடியை ஒரு டப்பாவில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

**அதன் பிறகு இந்த கீழேநெல்லி பொடி ஒரு தேக்கரண்டி அளவு தண்ணீரில் போட்டு கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும்.இப்படி செய்தால் பல் ஈறு பாதிப்பு முழுமையாக குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

**அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் இந்த தண்ணீரில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

**இந்த மஞ்சள் பானத்தை இளஞ்சூட்டில் வாயில் ஊற்றி நன்றாக கொப்பளித்தால் பல் ஈறு வலிமை அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)கல் உப்பு – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

**பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் சிறிது கல் உப்பு போட்டு கரையும் வரை காத்திருக்க வேண்டும்.

**இந்த கல் உப்பு நீரை கொண்டு வாய் கொப்பளித்தால் பல் ஈறுகளின் வலிமை அதிகரிக்கும்.உங்களுக்கு ஈறுகளில் இரத்தக் கசிவு இருந்தால் இந்த கல் உப்பு நீரை கொண்டு வாய் சுத்தம் செய்யலாம்.