சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைய இந்த வீட்டு வைத்தியங்களை பின்பற்றலாம்.நிச்சயம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படாது.
தீர்வு 01:
சிறுகன்பீளை மற்றும் மூக்கிரட்டை கீரை ஆகியவற்றை சம அளவு எடுத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பின்னர் இதை பொடியாக நறுக்கி வைத்துக் கொளல் வேண்டும்.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
அதன் பிறகு நறுக்கி வைத்துள்ள மூக்கிரட்டை மற்றும் சிறுகன்பீளையை போட்டு குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை ஆறவைத்து வடிகட்டி குடித்தால் சிறுநீரக கற்கள் கரைந்துவிடும்.
தீர்வு 02:
ரணகள்ளி மற்றும் கல்லுருக்கி ஆகிய இரண்டு இலைகளையும் சம அளவு எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
பின்னர் அதில் நறுக்கிய ரணகள்ளி மற்றும் கல்லுருக்கி இலையை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை வடித்து குடித்தால் சிறுநீரக கல் கரையும்.
தீர்வு 03:
வெட்டி வேர்,தொட்டால் சிணுங்கி ஆகியவற்றை சம அளவு எடுத்து சுத்தம் செய்து பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் 150 மில்லி தண்ணீர் ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானம் நன்கு கொதித்து 100 மில்லியாக சுண்டி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு சிறிது நேரம் அறவிட வேண்டும்.பின்னர் இந்த பானத்தை பருக வேண்டும்.
தீர்வு 03:
பத்து பீன்ஸை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு கப் தண்ணீர் ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை குடித்தால் சிறுநீரக கல் கரையும்.