நமது வீட்டில் கட்டாயம் ஏதேனும் ஒரு மூலிகை செடி வளர்க்க வேண்டும்.நமக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்க அவசியம் வீட்டில் ஒரு செடி வளர்க்க வேண்டும்.வீட்டில் செடி வளர்ப்பதால் மன ஆரோக்கியம் மேம்படும்.வீட்டில் தோட்டம் வைத்து பராமரித்தால் மன மகிழ்ச்சி கிடைக்கும்.
அதேபோல் நிம்மதியனான தூக்கம் கிடைக்க வீட்டில் உள்ள செடிகள் உதவும் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மையில் சிலவகை செடிகளை நம் படுக்கை அறையில் வைத்தால் நமக்கு நல்ல தூக்கம் கிடைக்கும்.
1)லாவெண்டர்
இது அதிக நறுமணம் நிறைந்த செடிகளில் ஒன்று லாவெண்டர்.இதை நமது படுக்கை அறையில் வைத்தால் மன நிம்மதி கிடைக்கும்.லெவெண்டர் வாசனையை சுவாசிக்கும் பொழுது நரம்பு பிரச்சனைகள் சரியாகும்.
2)பாம்பு தாவரம்
நமது படுக்கை அறையில் பாம்பு தாவரம் வைத்தால் நமது தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கும்.
3)கற்றாழை
நமது படுக்கை அறையில் இருக்கின்ற எதிர்மறை ஆற்றலை வெளியேற்றும் ஆற்றல் கற்றாழை ஜெல்லுக்கு உண்டு.
4)மல்லிகை
அதிக வாசனை நிறைந்த மல்லிகை செடியை வீட்டு படுக்கை அறையில் வைத்தால் நமது தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கும்.
5)கார்டனியா
இந்த செடியை படுக்கை அறையில் வைத்தால் தூக்கம் தூண்டப்படும்.இந்த செடியை பார்க்க மல்லிகை பூ தோற்றத்தில் இருக்கும்.இந்த செடியை படுக்கை அறையில் வைத்தால் நல்ல தூக்கம் பெற முடியும் என்பது ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கிறது.
6)ஸ்பைடர் செடி
இதை நமது படுக்கை அறையில் வைத்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.அதேபோல் மணிபிளாண்ட் செடியை படுக்கை அறையில் வைத்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.அதேபோல் துளசி செடி வைத்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.