உடல் அழுக்குகளை போக்க சோப் பயன்படுத்தி குளிக்க வேண்டியது முக்கியம்.சோப் வியர்வை துர்நாற்றத்தை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.தற்பொழுது பல பிராண்டுகளில் சோப் கிடைக்கிறது.சில குடும்பம் ஒரே பிராண்ட் சோப் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.இன்னும் சில குடும்பத்தில் ஒரே சோப்பை அனைவரும் பயன்படுத்துகின்றனர்.
இப்படி ஒரே சோப்பை பலர் பயன்படுத்துவது நல்லதா என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.ஒரே சோப் பயன்படுத்துவதால் சருமம் என்னாகும் என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.ஒரே சோப்பை குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் பயன்படுத்தினால் பாக்டீரியாக்கள்,வைரஸ் போன்ற தொற்றுகள் எளிதில் மற்றவர்களுக்கு பரவிவிடும்.
ஒருவருக்கு தேமல்,படர் தாமரை போன்ற சருமப் பிரச்சனை இருந்தால் அவர்கள் பயன்படுத்தும் சோப்பை நாம் பயன்படுத்தினால் எளிதில் அவை தொற்றிவிடும்.ஒருவர் பயன்படுத்திய சோப்பை மற்றவர் பயன்படுத்தினால் பாலியல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.
ஒருவர் பயன்படுத்திய சோப்பை மற்றவர் பயன்படுத்தினால் கிராஸ் இன்பெக்சன் ஏற்படலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒவொருவருக்கும் சரும வகை ஒரே மாதிரி இருப்பதில்லை.ஒருவருக்கு எண்ணெய் பசை சருமம் இருக்கலாம்.ஒருவருக்கு வறண்ட சருமம் இருக்கலாம்.எனவே அவரவர் சரும வகையை பொறுத்து சோப் வாங்கி பயன்படுத்துங்கள்.
அனைவரும் ஒரே சோப் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு அவரவருக்கென்று தனி சோப் வாங்கி பயன்படுத்துவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.அதேபோல் சருமத்திற்கு சோப் பயன்படுத்திய பிறகு அதை தண்ணீர் ஊற்றி கழுவி ஈரப்பதம் இல்லாமல் பராமரிக்க வேண்டும்.இப்படி செய்தால் பாக்டீரியா,கிருமி தொற்றுகள் உருவாகாமல் இருக்கும்.அதேபோல் குளித்த முடித்தவுடன் சோப்பை பாக்ஸில் போட்டு மூடி வைக்க வேண்டும்.