இப்போவே அதிக தொகுதி கேட்க ஆரம்பிச்சுட்டாங்களே? பதற்றத்தில் திமுக!

Photo of author

By Rupa

இப்போவே அதிக தொகுதி கேட்க ஆரம்பிச்சுட்டாங்களே? பதற்றத்தில் திமுக!

Rupa

Are you starting to hear more volume now? DMK in tension!

2021 ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அந்த தேர்தலில் திமுக முதல் முறையாக 133 தொகுதிகளில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது. திமுக இதுவரை இத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றதாக சரித்திரமே இல்லை. ஜெயலலிதா இறப்பு, அதிமுக பாஜக கூட்டணி ஒரு காரணமாக இருந்தாலும் திமுக வெற்றிக்கு முக்கிய காரணம் அதன் கூட்டணியில் இருந்த கட்சிகள் தான்.

அந்த 2021 ஆண்டு காலத்தில் அதிமுக எதிர்ப்பு அதிகமாக இருந்ததால் சிறிய கட்சிகள் திமுகவுடன் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டின. நிலைமை தங்களுக்கு சாதகமாக இருந்ததால் கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த தொகுதிகளை மட்டுமே கொடுத்து விட்டு நிறைய தொகுதிகளில் நின்று திமுக வென்றது. ஆனால் இன்றைய நிலைமையே வேற. திமுக வெற்றிக்கு நம்மைப்போன்ற கூட்டணி கட்சிகள் தான் காரணம் என்பதை கூட்டணி கட்சிகள் உணரத்தொடங்கியுள்ளன.

CPM கட்சியினர் தாங்கள் திமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம் என்பதை மறந்துவிட்டு நேரடியாகவே திமுகவை விமர்சனம் செய்கின்றனர். திமுக கட்சி ஆட்சிக்கு வந்து இதுவரை முழுமையாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று நேரடியாகவே விமர்சனம் செய்கின்றனர். கூட்டணியில் இருக்கும் CPM கட்சி இப்படி பேசுவதை திமுகவினர் இதுவரை யாரும் கண்டிக்கவில்லை.

அதேபோல எங்களுக்கு இந்த முறை அதிக தொகுதிகள் வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். திமுக மிக முக்கியமாக நம்பி இருக்கும் திருமாவளவனும் எங்கள் கூட்டணிக்கு இந்த முறை அதிக தொகுதிகள் வேண்டும் என்று கேட்டுள்ளார். கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகள் கொடுக்க மறுத்தால் விஜய்யுடனும், அதிமுகவுடன் எந்த நேரத்திலும் கூட்டணிக்கு செல்வதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே திமுக இந்த பிரச்சனையில் என்ன செய்யப்போகிறது என்பது புரியாத புதிராக இருப்பதாக கட்சி தொண்டர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.