ராமதாஸ் Vs அன்புமணி –  மருமகளா? மகளா? ராமதாஸின் அடுத்த ஆட்டம்?

0
64
Ramadoss Vs Anbumani – Daughter-in-law? Daughter? Ramadoss' next Plan?
Ramadoss Vs Anbumani – Daughter-in-law? Daughter? Ramadoss' next Plan?

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) இப்போது நடந்து வரும் அதிகார மோதல் முடிவே இல்லாமல் தொடர்கதையாக மாறி பரபரப்பாகக் கிளம்பியுள்ளது. கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே நீண்ட நாட்களாக இருந்த கருத்து வேறுபாடு, தற்போது செயல்பாடுகளாக வெளிப்படத் தொடங்கியுள்ளது.

இரு தரப்பிலும் இதுவரை நீண்ட நாட்களாக நிலவி வந்த அதிருப்தி, தற்போது வெடிக்கும் நிலைக்கு வந்து விட்டது. பாமக கட்சியை கட்டுப்படுத்த விரும்பும் அதிகார மையமாக, ஒருவர் மருமகள் சௌமியா, மற்றொருவர் மகள் ஸ்ரீகாந்திமதி உள்ளனர்

மருமகளா? மகளா? 

அண்மையில் நடந்த செயற்குழு கூட்டத்தில், ராமதாஸ் தனது மகள் ஸ்ரீகாந்திமதிக்கு மேடையேற அனுமதித்தது, கட்சிக்குள் புதிய அதிகார அமைப்பை உருவாக்கும் முயற்சி என்று சிலர் கருதுகின்றனர். இது சாமர்த்தியமாக கட்சிக்குள் சௌமியாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் முயற்சி எனவும் கூறப்படுகின்றது.

கடந்த சில ஆண்டுகளாக பாமகவின் முக்கிய ஆலோசகராக திகழ்ந்துவரும் சௌமியா, கடந்த சில வருடங்களாக மாநிலச் செயலாளர்களுக்குப் பயிற்சி வழங்குவது முதல், கூட்டங்கள் நடத்துவது வரை தன்னை அதிகார மையமாக நிரூபித்து வந்த நிலையில், இப்போது ராமதாஸ் பக்கம் இருந்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதாக தெரிகிறது.

அன்புமணி நிலை… டெல்லியின் அட்வைஸ்

இது கட்சி செயல்பாடுகளில் தந்தையும் மகனும் நேரடியாக மோதுகிறதைக் காட்டுகிறது. கட்சியில் தற்போது மையமாக இருப்பவர் அன்புமணி என்பதிலும் சந்தேகம் இல்லை. ஆனால் ராமதாஸ் மறைமுகமாக அவரின் நடத்தை குறித்து அவ்வப்போது சுட்டிக்காட்டி வருகிறார். இந்நிலையில், சௌமியா அன்புமணியின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முயற்சி செய்கிறார் என்ற விமர்சனமும் உருவாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில், டெல்லியில் உள்ள ஒரு முக்கிய பாஜகவின் அரசியல் ஆலோசகர் அன்புமணியிடம், “ராமதாஸ் மீது நேரடி எதிர்ப்பு காட்ட வேண்டாம். ஆட்டத்தை கவனமாக ஆடுங்கள். பாமகவின் மதிப்பையும், கூட்டணியின் சூழ்நிலையையும் காப்பாற்றுங்கள்,” என அறிவுரை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

செயற்குழுவில் மாற்றம் 

செயற்குழு கூட்டத்தில் ஸ்ரீகாந்திமதியின் மேடையேறும் தருணம், வருங்கால அரசியல் திட்டத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது. கட்சி கட்டமைப்பில் இனி புதிய மாற்றங்கள், பொறுப்பளிப்பு, முக்கியமான நியமனங்கள் எல்லாம் நடக்கும் என்பதற்கே இது அடையாளம்.

குடும்ப பிரச்சனையிலிருந்து பாமக தப்பிக்குமா?

ஒரே குடும்பத்தில் இருந்து பல தலைவர்கள் இருந்தாலும், கட்சி முழுமையாக ஒரு நபரால் நிர்வகிக்கப்படக் கூடாது என்பதே சில உறுப்பினர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் தற்போது பாமக – குடும்ப அரசியலின் ஒரு களமாக மாறியிருக்கிறது என்பது உண்மை. இந்த அதிகார யுத்தம் அடுத்த கட்டத்திற்கு செல்கிறதா? இல்லை இதிலிருந்து பாமக தப்பிக்குமா என அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

Previous articleஜெயலலிதா என்னை தம்பி என்று அழைத்தார் – திருமாவளவன் அதிமுகவுக்கு எச்சரிக்கை
Next article4 சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகள் செல்ல தடை: உயர் நீதிமன்ற உத்தரவால் பயணிகள் அச்சம்!