ADMK TVK: அதிமுக இம்முறை கட்டாயம் விஜய்யின் கூட்டணி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தது. சிகப்பு கம்பளம் போட்டு வரவேற்க காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு பெருத்த ஏமாற்றம் தான் கிடைத்தது. கரூர் துயர சம்பவத்திற்கு முன்பு எந்த நிலைப்பாட்டிலிருந்தோமோ அதன் வழியிலிலேயே தொடர்வதாக தவெக முக்கிய புள்ளி கூறிவிட்டது. இதனால் பாஜக மற்றும் சில அதிமுக மூத்த தலைகள் பெருத்த கோவத்தில் உள்ளனர்.
விஜய் அரசியலுக்குள் நுழைந்ததிலிருந்து தனது கொள்கை எதிரியாக பாஜக-வை கூறியுள்ள போது, கரூர் பிரச்சனையில் அவருக்கு ஆதரவு கொடுத்து கூட்டணி-க்கு எடப்பாடி அடிபோட்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் தற்போது தவெக தனது ஆரம்பக்கட்ட நிலைப்பாட்டில் தான் உள்ளது என அதன் சீனியர் கூறியது, இவரது கனவை சுக்குநூறாக்கியுள்ளது.
மேற்கொண்டு பாஜக மேல் போதிய நம்பிக்கை இல்லை,விஜய்யை வைத்து பாஜக-வை கழட்டி விட்டுவிடலாம் என்ற எடப்பாடியின் அனைத்து எண்ணமும் பழிக்காமல் போனது. அதே சமயம் எடப்பாடி தற்போது வந்த புதிய கட்சியின் மவுசை பார்த்து இணைத்துக்கொள்ள எப்படி தயாராகலாம் என்றும் பல கேள்விகளை முன் வைக்கின்றனர். வரும் நாட்களில் பாஜக மற்றும் அதிமுக-விற்கு இடையே உள்ள பந்தம் சமரசமாக இருக்க வாய்ப்பில்லை என்றும் கூறுகின்றனர்.
மீண்டும் விஜய்-யின் கூட்டணியை எதிர்பார்த்து எடப்பாடி உட்கார்ந்திருந்தால் கட்டாயம் ஏமாற்றத்தோடு கட்சியி மேல் எடப்பாடிக்கு உள்ள நன்பகத்தன்மை குறித்தும் கேள்வி எழவும் அதிக வாய்ப்புள்ளது.

