Cinema, District News

கும்பலாக வீட்டின் மொட்டை மாடியில் சூதாடிய பிரபல நடிகர் கைது!

Photo of author

By Parthipan K

12B, ஏய் ரொம்ப அழகா இருக்கே!, லேசா லேசா, இயற்கை, உள்ளம் கேட்குமே உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரபல நடிகர் ஷாம்.இவர் தற்பொழுது கொரோனா காலகட்டத்தில் எப்பொழுதுமே வீட்டிலே முடங்கி உள்ளார்.

கொரோனா தொற்று பரவாமல் இருக்க கூட்டம் கூடினாலோ, வெளியே சுற்றினாலும் சென்னை காவல்துறை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இந்நிலையில்,நடிகர் ஷாம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டின் மொட்டை மாடியில் கும்பலைக் கூட்டி பணம் வைத்து சூதாடிய விளையாடி உள்ளார். இந்த தகவலை அறிந்த காவல்துறையினர்  பணத்தை வைத்து சூதாடிய நடிகர் ஷாம் மற்றும் அவருடன் விளையாட கொண்டிருந்தவர்களை இரவோடு இரவாக போலீசார் கைது செய்தனர். 

இதேபோன்றே, ஸ்டெர்லிங் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் சூதாடி கொண்டிருந்த இயக்குனர் ஆனந்த் உள்ளிட்ட 13 பேர் கைதாகி ஜாமீனில்  விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

குரூப்-4 தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு இன்று பணி நியமன ஆணை வழங்கிய முதலமைச்சர்!

கடனை திரும்பச் செலுத்த ரிசர்வ் வங்கி மக்களுக்கு வைத்த கெடு?

Leave a Comment