எம்.பி ஆனதும் வழக்கம் போல அராஜகத்தை ஆரம்பித்த சேலம் திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன்

Photo of author

By Parthipan K

எம்.பி ஆனதும் வழக்கம் போல அராஜகத்தை ஆரம்பித்த சேலம் திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன்

Parthipan K

எம்.பி ஆனதும் வழக்கம் போல அராஜகத்தை ஆரம்பித்த சேலம் திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன்

வனச்சரக அலுவலரை மிரட்டியதாக சேலம் மாவட்டத்தை சேர்ந்த திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் திமுக சார்பில் போட்டியிட்டு ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 926 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை வீழ்த்தி எஸ்.ஆர்.பார்த்திபன் வெற்றி பெற்றார். 

இந்நிலையில், வேடன்கரடு மலைப்பகுதிக்கு கள தணிக்கைக்கு சென்ற வனக்காவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வனச்சரக அலுவலர் திருமுருகன் தந்த புகாரின் பேரில் திமுக எம்.பி எஸ்.ஆர்.பார்த்திபன் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இதுதொடர்பாக பேசிய அவர், தன் மீது அவப்பெயர் ஏற்படுத்தவே வழக்குப்பதிவு செய்துள்ளதாக எஸ்.ஆர். பார்த்திபன் தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர்.

கடந்த காலங்களில் திமுக என்றாலே அராஜகம் மற்றும் ரவுடிகள் நிறைந்த கட்சி என்று பெயர் எடுத்து வந்த நிலையில் மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள ஆளுங்கட்சிகளின் மீதுள்ள அதிருப்தியால் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு மக்கள் வாய்ப்பளித்தனர். கிடைத்த வாய்ப்பை திமுக எம்பிக்கள் சரியாக பயன்படுத்தி கட்சிக்கு நல்ல பெயரை பெற்று தர முயற்சிக்காமல் வழக்கம் போல தங்களுடைய அராஜகத்தை காட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

இதற்கு முன் ஓசி பிரியாணி,ஓசி டீ, ஓசி பஜ்ஜி,பியூட்டி பார்லர் என திமுகவின் தொண்டர்களாலும் கீழ்மட்ட நிர்வாகிகளாலும் தான் மக்களுக்கு தொந்தரவுகள் ஏற்பட்டு வந்தது. தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.பி.யாலேயே மக்களுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.