இந்தியாவை எச்சரிக்கும் சீனா! ஏற்றுக்கொள்ள மறுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்!

0
275

தொழில்நுட்ப வளர்ச்சிக்காக தற்போது இருக்கும் 4g இக்கு பதிலாக 5g யை மேம்படுத்த நாட்டில் உள்ள மொபைல் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் ஹூவேய் நிறுவனத்திற்கு அழைப்பு விடவில்லை. இதனால் சீன கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஹூவேய் நிறுவனத்தை அழைக்கவில்லை எனில், ஹூவேய் நிறுவனத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் பதில் நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்று இந்தியாவை சீனா எச்சரித்துள்ளது.

தொழில்நுட்பத்தை நாட்டில் நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சியில் பங்கேற்குமாறு சீனாவின் தொலைத் தொடர்பு ஹூவேய் மொபைல் நிறுவனத்துக்கு இதுவரை அழைப்பு விடுக்கப்படவில்லை.
இதற்கு காரணமாகக் கூறப்படுவது, சீனாவின் ஹூவேய் மீதான அமெரிக்காவின் தடையே ஆகும்.

ஹூவேயின் தொழில்நுட்பத்தை சீனா தனது உளவு வேலைக்கு பயன்படுத்துகிறது என்று குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நிறுவனத்தை தடை செய்யும் பட்டியலில் வைத்தார். சீனாவின் ஹூவேய் தொழில்நுட்ப தயாரிப்பு மொபைல்களை பயன்படுத்த வேண்டாம் என்று நட்பு நாடுகளையும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த விவகாரத்தில் அமெரிக்கா அதிபர் டிரம்பின் குற்றச்சாட்டை இந்தியா ஏற்று ஹூவேய் நிறுவனத்தின் பொருட்களை இந்தியா புறக்கணிக்கிறது என்று சீனா, அந்நாட்டில் உள்ள இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரியை அழைத்து எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

ஹூவேயின் தொழில்நுட்ப வணிகத்தை இந்தியாவில் தடுக்கும் எனில், பதில் நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்று சீனா கண்டித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவில் இந்திய நிறுவனங்கள் அதிகமாக இல்லை என்ற போதிலும், இன்போசிஸ், டி.சி.எஸ்., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாக்டர் ரெட்டி ஆய்வகங்கள், மகிந்திரா அண்ட் மகிந்திரா போன்ற முக்கிய நிறுவனங்கள் அங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்நிறுவனங்கள் சீனா தடை செய்ய கூடும் என கருதுகின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Previous articleசென்னை – சேலம் எட்டு வழிச் சாலை அமைக்க முயற்சித்த மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு
Next articleதிமுக அதிமுக கட்சி பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது? கட்சி தலைவர்கள் அறிவிப்பு? இதுதான் புதிய பெயர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here