நீண்ட நாள் குழந்தை பேறு இல்லாமல் வாடும் பெண்களுக்கு கர்ப்பப்பை அடைப்பு நீங்க மருத்துவம்!

0
162

நீண்ட நாள் குழந்தை பேறு இல்லாமல் வாடும் பெண்களுக்கு கர்ப்பப்பை அடைப்பு நீங்க மருத்துவம்!

இன்றைய கால முறைகளில் கர்ப்பப்பை பிரச்சனை என்பது 80 சதவீத பெண்களுக்கு உள்ளது. அதற்கு காரணம் நாம் உண்ணும் உணவுகளே. அனைத்திலும் ரசாயனம் என்று தோன்றி உடம்பிலும் ரசாயனம் கலந்து ஏகப்பட்ட பிரச்சனைகள் உருவாகிறது. அதிலும் பெண்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்து விடுகின்றன. கர்ப்பப்பை சம்பந்தமான கர்ப்பப்பை கட்டிகள், கர்ப்பப்பையில் புற்றுநோய், கருத்தரிக்காமல் போவது, கர்ப்பப்பை இறங்குதல் என பல்வேறு பிரச்சினைகள் உருவாகி உள்ளன.

நீண்டநாள் தங்களுக்கென குழந்தை இல்லையே என அவதிப்படும் பெண்களுக்கு கர்ப்பப்பையில் உள்ள அடைப்பு நீங்கி எளிதில் கருத்தரிக்க நாட்டு வைத்திய முறையை தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:

1. அரச இலை ஒன்று

2. வெற்றிலை1

3. முருங்கைப் பூ 10

4. ஏலக்காய் ஒன்று

5. சீரகம் அரை டீஸ்பூன்.

6. தேன்

செய்முறை:

1. முதலில் ஒரு உரலை எடுத்துக் கொள்ளவும்.

2. அதில் இளம் தளிராக உள்ள அரச இலையை நரம்பு நீக்கி பிச்சிப் போட்டு கொள்ளவும்.

3. பின் வெற்றிலையை நரம்பு நீக்கி போட்டுக் கொள்ளவும்.

4. இதை ஒன்றிரண்டாக இடித்து பின் ஏலக்காய், முருங்கை பூ, சீரகம், ஆகியவற்றை சேர்த்து நன்றாக எடுத்துக் கொள்ளவும்.

5. இது ஒரு வேளைக்கான மருந்து மட்டுமே.

6. இதை நன்கு உருட்டி காலையில் வெறும் வயிற்றில் தேனுடன் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர கருப்பை அடைப்பு மிக எளிய முறையில் நீங்கிவிடும்.

author avatar
Kowsalya