வீடியோ: இரட்டை வேடங்களில் வரலட்சுமியின் கொரோனா விழிப்புணர்வு குறும்படம்!

Photo of author

By Kowsalya

வீடியோ: இரட்டை வேடங்களில் வரலட்சுமியின் கொரோனா விழிப்புணர்வு குறும்படம்!

Kowsalya

அனைத்து நடிகர் நடிகைகளும் கொரோனாவின் தாக்குதலையும் அதை கட்டுப்படுத்தும் வழிமுறைகளையும் விழிப்புணர்வாக பதிவு மற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

 

நடிகை வரலட்சுமி தமிழ் திரையுலகிற்கு தாரை தப்பட்டை போன்ற படங்களில் நடித்து வில்லியாகவும் நடித்து புகழ்பெற்றவர். இப்பொழுது அவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். வீட்டில் மற்றும் தெருவில் உள்ள நாய்களுக்கு உணவு அளிக்கும் மிகுந்த சேவையை செய்து வருகிறார்.சமீபத்தில்கூட உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து தெரு நாய்களுக்கு உணவு வழங்க கோரி ஒரு டன் அரிசி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் நமது சரத்குமார் அவர்களின் மகளான வரலட்சுமி இரட்டை வேடங்களில் நடித்து கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

 

அதில் ஒருத்தருக்கு கொரோனா பற்றி பயமுள்ள ஒருவராகவும், விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அறிவுரை கூறும் ஒருவராகவும் வரலட்சுமி நடித்துள்ளார்.

 

இது தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் நடித்து வெளியிட்டுள்ளார்.

 

அதில் கொரோனா மற்றும் தடுப்பூசியின் விளைவுகள் குறித்து பயப்படும் ஒருவருக்கு இது வெறும் கதையே என எடுத்துக்கூறி தடுப்பூசி போட்டுக் கொள்வதன் முக்கியத்துவத்தை விளக்கி உள்ளார்..

 

வாகனங்களில் செல்லும் பொழுது நாம் ஏன் ஹெல்மெட் அணிகிறோம். ஹெல்மெட் அணிந்தால் விபத்து ஏற்படாது என்பது அல்ல. விபத்து ஏற்பட்டாலும் நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள ஹெல்மெட் அணிகிறோம். அதேபோல தடுப்பூசி என்பது கொரோனாவை வராமல் தடுக்க என்பதல்ல. கொரோனா வந்தாலும் அதை கட்டுப்படுத்தி நம்மை உயிர் வாழ வைப்பதுதான் தடுப்பூசி. தடுப்பூசி போட்டு கொள்பவரும் இறக்கிறார்களே என்ற கேள்விக்கு, அவர்கள் வேறு விதமான நோயினால் பாதிக்கப் பட்டிருந்தால் இறக்க வாய்ப்புள்ளது அதனால் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எல்லாரும் இறந்து விடுவதில்லை என்று கூறுகிறார்.

 

இந்த வீடியோ மக்களால் ஆதரிக்கப்பட்ட பகிர்ந்து வருகிறார்கள்.

 

https://www.instagram.com/tv/CPr3ADoA7mT/?utm_medium=copy_link