ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர்கள் தேர்வானது வரலாற்று சாதனை – அமைச்சர் மெய்யநாதன்!
தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நேற்று தஞ்சாவூர் வந்தார். அவர் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் செயற்கை இழை ஓடுதளம் மற்றும் மின்விளக்கு வசதிகள் செய்ய ரூபாய் 6 கோடியே 86 லட்சம் செலவில் அமைக்க தற்போது திட்டமிட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை பார்வையிடவும், மின்விளக்குகள் பொருத்தும் பணி முடிவடைந்த நிலையில், செயற்கை இழை ஓடுதளம் அமைக்கும் பணிகள் நடந்து வருவதை அமைச்சர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் விளையாட்டு அரங்கில் ஒலிம்பிக் போட்டி தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள செல்பி பாயிண்டில் நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அப்போது அவருடன் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன், நீலமேகம், கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா , பயிற்சி கலெக்டர் கௌசிக், வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி, மாவட்ட விளையாட்டு அதிகாரி அந்தோணி ராஜ், தாசில்தார் பாலசுப்பிரமணியன், தஞ்சை மாவட்ட தடகள கழக தலைவர். கிருஷ்ணசாமி வாண்டையார் மற்றும் விளையாட்டு பயிற்சியாளர்கள் உடனிருந்தனர். அதன் பின் நிருபர்களிடம் பேசிய போது அவர் இவ்வாறு கூறினார்.