2 நாட்களாக மாற்றமின்றி விற்கும் பெட்ரோல், டீசல்.!! இன்றைய விலை நிலவரம்.!!

0
180

சென்னையில் தொடர்ந்து கடந்த சில நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து பெட்ரோல் லிட்டருக்கு 21 காசுகள் உயர்ந்து ரூ.99.36 க்கும், டீசல் லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து ரூ.94.45க்கும் விற்பனையானது.

அதன்படி, நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ 103.01 ஆகவும், டீசல் லிட்டர் ரூ 98.92 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது

Previous article‘பெட்ரோல் விலை ரூ.150 தொடும்’ என பிரதமரை விமர்சித்த நாராயணசாமி.!!
Next articleநடமாடும் பல் மருத்துவ சேவை துவக்கி வைத்த-சுகாதாரத்துறை அமைச்சர்.!!