கள்ளக்காதலால் ஏற்பட்ட அவமானம் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண்!

0
205

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே இருக்கின்ற குமுளூர் அருந்ததியர் தெருவைச் சார்ந்த பாலசுப்பிரமணி என்ற நபர் இவருடைய மனைவி மீனா உள்ளிட்ட இருவருக்கும் 2 மகனும் 1 மகளும் இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், ஏழ்மையில் இருந்த பாலசுப்பிரமணி பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த 2012ஆம் வருடம் மலேசியா சென்று அங்கேயே ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வருகின்றார். அங்கு சம்பாதிக்கும் பணத்தை தன்னுடைய மனைவி மீனாவிற்கு அனுப்பி வைத்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், அதே கிராமத்தைச் சார்ந்த கனகாம்பாள் என்பவருக்கும், மீனாவிற்கும், பழக்கம் உண்டானது.

இந்த பழக்கத்தை பயன்படுத்திக்கொண்டு கனகாம்பாள் சகோதரர் சுரேஷ் என்பவர் மீனாவுடன் நட்பாக பழகி வந்திருக்கிறார். அதன் பிறகு நாளடைவில் அவர்களின் நட்பு கள்ளக்காதலாக மாறி போனது. இதனை அடுத்து அடிக்கடி இருவரும் சந்தித்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், சுரேஷ் வெளிநாடு செல்ல வேண்டும் என்று மீனாவிடம் தெரிவித்து அதற்காக 2 லட்சம் ரூபாய் வரை பெற்றுக்கொண்டு மலேசியா சென்று அங்கே வேலை பார்த்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில், சுரேஷ், மீனா, ஆகியோருக்கு இடையே இருந்த கள்ளத்தொடர்பு சுரேஷின் பெற்றோருக்கு தெரியவந்தது. கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் சுரேஷின் தாய் ராமாயி ,சுரேஷின் மனைவி முத்துலட்சுமி, அவருடைய சகோதரி கனகாம்பாள், உள்ளிட்டோர் மீனா வீட்டிற்கு சென்று தகாத வார்த்தையால் அவரை திட்டி அவமானப்படுத்தி விட்டதாக சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக மீனா அந்த சமயத்திலேயே சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார், சிறுகனூர் காவல் துறையினர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் வழங்குமாறு தெரிவித்து விட்டதாக சொல்லப்படுகிறது. நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக மலேசியாவில் இருக்கும் தன்னுடைய கள்ளக்காதலன் சுரேஷிடம் மீனா தெரிவித்து மனவேதனை அடைந்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதற்கு நடுவில் சென்ற மாதம் 20ஆம் தேதி மீனா வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சூழ்நிலையில், அவருடைய உடலை காவல் துறையினருக்கு தெரிவிக்காமல் உறவினர்கள் அடக்கம் செய்து விட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், வெளிநாட்டிலிருந்து குமுளூர் கிராமத்திற்கு வந்த பாலசுப்பிரமணி தன்னுடைய மனைவிக்கு உண்டான அவமானங்களை அறிந்து தன்னுடைய மனைவியின் சாவுக்கு சுரேஷின் தாய், அவருடைய மனைவி மற்றும் அவருடைய சகோதரி தான் காரணம் என்று எழுத்துப்பூர்வமாக கடந்த 14ஆம் தேதி லால்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் புகார் வழங்கினார்.

அதனடிப்படையில், சிறுகனூர் காவல்துறையினர் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக சுரேஷின் தாய் மற்றும் அவருடைய மனைவி, அவருடைய சகோதரி உள்ளிட்ட 3 பேரையும், வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Previous articleஅரசு மருத்துவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சென்னை உயர்நீதிமன்றம்!
Next articleநகர்புற உள்ளாட்சித் தேர்தல் அதிமுக கூட்டணியில் தொடருமா பாஜக? இன்று முடிவை அறிவிக்கும் அண்ணாமலை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here