அந்த வீடியோவை பார்த்த பத்து வயது சிறுவன் 3 வயது சிறுமிக்கு செய்த அவலம்! பின்னணியில் இருக்கும் செல்போன்!

0
79
A 10-year-old boy who saw that video did a terrible thing to a 3-year-old girl! Cell phone in the background!
A 10-year-old boy who saw that video did a terrible thing to a 3-year-old girl! Cell phone in the background!

அந்த வீடியோவை பார்த்த பத்து வயது சிறுவன் 3 வயது சிறுமிக்கு செய்த அவலம்! பின்னணியில் இருக்கும் செல்போன்!

இந்த காலகட்டத்தில் சிறு குழந்தைகளுக்கு அதிக அளவில் செல்போனை கொடுத்து பழக்கப்படுத்தி விடுகிறார்கள். அவ்வாறு கொடுக்கும் பெற்றோர்கள் குழந்தைகள் எந்த விஷயங்களை பார்க்கிறார்கள் என்பதை கண்காணிப்பதில்லை. அவ்வாறு பார்க்காமல் விட்டதால் தான் உத்தர் பிரதேசத்தில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் ஒரு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

உத்திரபிரதேசம் கான்பூரில் 10 வயதுடைய சிறுவன் செல்போன் உபயோகித்து கொண்டிருந்துள்ளார். இந்த பத்து வயது சிறுவன் பல நாட்களாக ஆபாச படம் பார்த்து வந்துள்ளார். இது அவரது பெற்றோர்களுக்கே தெரியவில்லை.இச்சமயத்தில் இச்சிறுவனுடன் மூன்று வயது சிறுமி இருந்துள்ளார். அச்சிறுமியின் பெற்றோர்கள் வெளியே சென்று உள்ளனர். இந்த தருணத்தில் பத்து வயது சிறுவன் ஆபாச படத்தை பார்த்து அந்த மூன்று வயது சிறுமியிடம் அத்துமீறி நடந்து கொண்டுள்ளார்.

சிறுமி வலி தாங்க முடியாமல் தொடர்ந்து அழுது வந்த நிலையில், இதனை அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். மகள் கூறுவதைக் கேட்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பின்பு சிறுவன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சிறுவனை விசாரிக்கையில், இவர் தினந்தோறும் செல்போனில் ஆபாச படம் பார்த்தது தெரிய வந்துள்ளது.தற்பொழுது இந்த சிறுவன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் உள்ளார். இதனையடுத்து பெற்றோர்கள் அனைவருக்கும் பெரும் கோரிக்கையாக, குழந்தைகளிடம் செல்போன் தரும்பொழுது பேரண்டல் கண்ட்ரோல் என்பதை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.