200 அடி பள்ளத்தில் திடீரென பாய்ந்த கார்!! இரவு நேரத்தில் நிகழ்ந்த கோர சம்பவம்!!

0
34

200 அடி பள்ளத்தில் திடீரென பாய்ந்த கார்!! இரவு நேரத்தில் நிகழ்ந்த கோர சம்பவம்!!

காரானது 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததால் இளம் பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள டொடா மாவட்டத்தின் பமோ பகுதியில் நேற்று இரவு 4 பேர் ஒரு காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது கார் மலைப்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் நிலை தடுமாறிய கார் அருகில் இருந்த  200 அடி பள்ளத்தாக்கிற்குள் விழுந்தது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உடனடியாக  பள்ளத்தாக்கில் விபத்துக்குள்ளான காரினுள் இருந்த நான்கு பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதில் ஏற்கனவே இரண்டு பேர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படவே அதில் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒருவர் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து பதேர்வா எஸ்.பி வினோத் சர்மா கூறியதாவது,

விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் போது பள்ளதாக்கானது மிகவும் இருளாகவும், வழுக்கும் விதமாகவும் இருந்தது. இதனால் மிகவும் சிரமபட்டு அவர்களை மீட்டோம்.

தற்போது இந்த விபத்தில் சிக்கியவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றொருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்கள் பிலால் அகமது (23), இன்ஷா அயாஸ் (19) மற்றும் முசாபர் என்றும் காயமடைந்தவர் டேனிஷ் அயாஸ் என்றும்  தற்போது தெரிய வந்துள்ளது.