இரயில்வே மேடையில் வளர்ந்த குழந்தை நாடாளுமன்றத்திற்குள் நுழையும் என நினைக்கவில்லை!!! பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேச்சு!!!

0
46
#image_title

இரயில்வே மேடையில் வளர்ந்த குழந்தை நாடாளுமன்றத்திற்குள் நுழையும் என நினைக்கவில்லை!!! பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேச்சு!!!

மக்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் “ஏழைக் குடும்பத்தில் பிறந்து இரயில்வே மேடையில் வளர்ந்த நான் நாடாளுமன்றத்திற்குள் நுழைவேன் என்று நினைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இன்று(செப்டம்பர்18) தொடங்கி தற்பொழுது நடைபெற்று வருகின்றது. பழைய நாடாளுமன்றத்தில் நடைபெறும் கூட்டத்தொடரின் கடைசி நாள் என்று தற்பொழுது நடைபெறும் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை(செப்டம்பர்19) முதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.

இதையடுத்து பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று(செப்டம்பர்18) தொடங்கிய கூட்டத் தொடரில் பழைய நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாறு குறித்த விவாதத்தை நரேந்திர மோடி அவர்கள் தொடங்கிய வைத்து உரையாற்றினார்.

அப்பொழுது பேசிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் “ஏழைக் குடும்பத்தில் பிறந்து இரயில்வே மேடையில் தான் நான் வளர்ந்தேன். இரயில்வே மேடையில் வளர்ந்த குழந்தை நாடாளுமன்றத்திற்குள் நுழையும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. நான் மக்களிடம் இவ்வளவு அன்பை பெறுவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை.

நான் முதல் முறையாக எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்டு நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தேன். அப்பொழுது ஜனநாயகத்தின் கோவிலாக இருக்கும் நாடாளுமன்றத்தில் விழுந்து வணங்கினேன்” என்று பேசினார்.