மீண்டும் ஒரு கல்லூரி மாணவி தற்கொலை! காரணம் என்ன போலீசார் தீவிர விசாரணை!

0
78
A college student committed suicide again! What is the reason for the police intensive investigation!
A college student committed suicide again! What is the reason for the police intensive investigation!

மீண்டும் ஒரு கல்லூரி மாணவி தற்கொலை! காரணம் என்ன போலீசார் தீவிர விசாரணை!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள இளம்புவனம் செட்டியார் தெருவை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம். இவரது மகள் முத்தம்மாள் (18). இவர் கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் வணிகவியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் முத்தம்மாள் கல்லூரிக்கு சென்று வீடு திரும்பிய நிலையில் வீட்டில் சோகமாகவே காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து முத்தம்மாள் வீட்டின் மாடிக்குச் சென்றுள்ளார். மாடியில் உள்ள அறையில் மின்விசிறியில் அவரது துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். முத்தம்மாளை காணவில்லை என பெற்றோர்கள் வீடு முழுவதும் தேடிய நிலையில் மாடியில் தூக்கில் தொங்கியுள்ளார். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் பேரில் எட்டயபுரம் போலீசார் மாணவியின் வீட்டிற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி தற்கொலை செய்து கொண்டதன் காரணம் என்ன என்பதை விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி படிக்கும் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
Parthipan K